background img

புதிய வரவு

டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடிப்பு

புதுடில்லி : டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்தது. வாயில் எண் 7 அருகே குண்டு வெடித்துள்ளது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. குண்டு வெடிப்புக்கான காரணமும் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு 4 தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன. பார்க்கிங் ஏரியா அருகே குண்டு வெடித்தது. பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர்டு பிகோ காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பையில் குண்டு இருந்தது.

போலீஸ் ஆய்வு : குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் ஏ.டி.எஸ்., ( பயங்கரவாத தடுப்பு பிரிவு ) போலீஸ் மற்றும் டில்லி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் இன்று மாலை முதல் தகவல் அளிப்பார்கள் என தெரிகிறது.

பாதுகாப்பு படையினர் சுற்றிவளைப்பு : சிறிய ரக குண்டு வெடித்ததை தொடர்ந்து டில்லி ஐகோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts