background img

புதிய வரவு

த்ரிஷாவை மொய்க்கும் டைரக்டர்கள்!

ஒரு படத்தில் காமெடி நடிகர் வடிவேலு த்ரிஷா... த்ரிஷா... என்று த்ரிஷா புராணம் பாடிக் கொண்டிருப்பார். கடைசியில் அவருக்கு த்ரிஷா கிடைக்க மாட்டார். அதனால் விரக்தியடையாத அவர், த்ரிஷா இல்லன்னா திவ்யா... என்று டயலாக் பேசி மனதை திடப்படுத்திக் கொள்வார். அந்த நிலைமைதான் கோடம்பாக்கத்தில் டைரக்டராக அறிமுகமாக துடிக்கும் பல இளம் இயக்குனர்களின் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.

த்ரிஷாவுக்காகவே கதையை உருவாக்கிக் கொண்டு த்ரிஷா வீட்டு வாசலில் கதை சொல்ல காத்து கிடக்கிறது ஒரு கூட்டம். இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவுடன் கோடம்பாக்கத்திற்கு படையெடுப்பவர்களில் பலர் த்ரிஷாவை வைத்து ஒரு படமாவது பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக அவரிடம் கால்ஷீட் கேட்டு கால் கடுக்க காத்திருக்கிறார்கள் அந்த இளம் இயக்குனர்கள். ஆனால் அம்மணியோ, அனுபவம் இல்லாத இளம் இயக்குனர்களை தவிர்த்து வருகிறார்.

இதுபற்றி த்ரிஷா அளித்துள்ள பேட்டியில், நான் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன் அம்பு போன்ற படங்கள்தான் என் அடையாளமாக இருக்கும் என நினைக்கிறேன். இத்தனைப் படங்களில் நடித்த பின்னர் மூன்று படங்கள்தான் என் அடையாளம் என சொல்லும் அளவுக்கு இருக்கிறது. இனி என்னை அடையாளப்படுத்தும் படங்களில்தான் நடிக்கப் போகிறேன். நிறைய அறிமுக இயக்குநர்கள் கதை சொல்ல காத்திருக்கிறார்கள். நான்தான் தவிர்த்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts