background img

புதிய வரவு

இளம்பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். மீண்டும் செக்ஸ் புகாரில் சிக்கிய கேரள மந்திரி

கேரளாவில் கடந்த இடது முன்னணியின் ஆட்சியின் போது போக்கு வரத்து மந்திரியாக இருந்தவர் பி.ஜே. ஜோசப். இவர் 2007-ம் ஆண்டு சென்னையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் சென்ற போது முன்னிருக்கையில் அமர்ந்து இருந்த நடிகை லட்சுமி கோபக்குமாரை செக்ஸ் சில்மிஷம் செய்ததாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து நடிகை லட்சுமி கோபக்குமார் சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்தார். போலீசார் பி.ஜே. ஜோசப் மீது வழக்கு பதிவு செய்தனர். இது குறித்த விசாரணை சென்னை ஆலந்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் மந்திரி பதவியை பி.ஜே. ஜோசப் ராஜினாமா செய்தார். போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனது கேரள காங்கிரஸ் கட்சியை கலைத்து விட்டு கேரள காங்கிரஸ் எம்-வுடன் இணைந்தார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவருக்கு காங்கிரஸ் மந்திரி சபையில் நீர் பாசன துறை மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பி.ஜே.ஜோசப் மீது தொடு புழா அருகே உள்ள ஆலங்கட்டி என்ற இடத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தொடுபுழா குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் மந்திரி பி.ஜே.ஜோசப் தனது செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும் , தகாத வார்த்தைகளில் பேச முயன்றதாகவும் கூறியுள்ளார்.

இந்த வழக்குக்கு சாட்சியாக பீரு மேடு எம்.எல்.ஏ. பிஜி மோள், தொடுபுழா பி.எஸ்.என்.எல். அதிகாரி ஆகியோரை சேர்த்துள்ளார். மனுவை விசாரித்த தொடுபுழா மாஜிஸ்திரேட்டு எம்.எல்.ஏ. மற்றும் பி.எஸ்.என்.எல். அதிகாரியை ஜூன் 4-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிட்டார். ஏற்கனவே செக்ஸ் புகாரில் சிக்கி விடுதலையான மந்திரி பி.ஜே. ஜோசப் மீது மீண்டும் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக இளம் பெண் தொடர்ந்துள்ள வழக்கால் அவருடைய பதவிக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts