background img

புதிய வரவு

சபாநாயகர் அறையில் கருணாநிதி, எம்.எல்.ஏ.வாக இன்று பதவி ஏற்றார்

தமிழக சட்டசபைக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 229 பேர் கடந்த 23-ந்தேதி பதவி ஏற்றனர். அமைச்சர் மரியம்பிச்சை இறந்ததால் அமைச்சர் சிவபதி, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் பதவி ஏற்கவில்லை.

தி.மு.க. தலைவர் கருணாநிதியும், துரைமுருகனும் அன்றைய தினம் டெல்லி சென்றதால் பதவி ஏற்கவில்லை. கடந்த 27-ந்தேதி அமைச்சர் சிவபதி, திருச்சி மனோகரன் ஆகியோர் எம்எ.ல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியும், சட்டசபை தி.மு.க. துணைத் தலைவர் துரைமுருகனும் இன்று காலை எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர். இதற்காக, 2 பேரும் இன்று புனித ஜார்ஜ்கோட்டையில் உள்ள சபாநாயகர் அறைக்கு காலை 11 மணிக்கு வந்தனர்.

அப்போது சபாநாயகருக்கு கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை கொடுத்து பதவி ஏற்றார். உளமாற என்று கூறி உறுதிமொழி எடுத்து கொண்டார். உறுதி மொழி பத்திரத்திலும், சட்டமன்ற பதிவேட்டிலும் கையெழுத்திட்டார். அவரை தொடர்ந்து துரைமுருகனும் பதவி ஏற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், சற்குண பாண்டியன், தி.மு.க. கொறடா சக்கரபாணி, முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. துரைசாமி, எம்எ.ல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். சபாநாயகர் அறையில் இருந்து வெளியே வந்த கருணாநிதியிடம், சட்ட சபையில் தி.மு.க எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கை எப்படி இருக்கும்? என்று கேட்டபோது, கூர்ந்து கவனியுங்கள் என்று பதில் அளித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts