background img

புதிய வரவு

ஒரு மாதத்திற்குள் தென்காசி வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்-சரத்குமார்

தென்காசி: ஒரு மாதத்திற்குள் தென்காசிக்கான வளர்ச்சித் திட்டங்களை வகுத்து, தென்காசியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தீவில நடவடிக்கைகளில் இறங்கவுள்ளேன் என்று நடிகரும், தென்காசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.

தென்காசியில் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் சரத்குமார். தனக்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி கூற தென்காசி வந்த அவர் அங்கு மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது தொகுதி மக்களிடையே அவர் பேசுகையில், தென்காசி தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன்.

இன்னும் ஒரு மாதத்திற்குள் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணிகளை முடுக்கி விடவுள்ளேன்.

தொழில்துறையில் மிகவும் பின் தங்கியுள்ளது தென்காசி. இங்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சரத்குமார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts