background img

புதிய வரவு

பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்த ரஜினி

சிறுநீரக பாதிப்புக்காக நவீன சிகிச்சை தேவைப்பட்டதால், நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். சிங்கப்பூருக்கு சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்குள்ள டாக்டர்கள் குழுவினர் ரஜினிகாந்துக்கு, டயாலிசிஸ் சிகிச்சை அளித்தனர். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, 29.05.2011 அன்று காலை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு ரஜினிகாந்த் மாற்றப்பட்டார்.

டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் ரஜினிகாந்த் உற்சாகமாக பேசினார். பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts