background img

புதிய வரவு

அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு சோனியா முயற்சி: வைகோ பேச்சு

வெம்பக்கோட்டை : ""அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கவே தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்,'' என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

ம.தி.மு.க., 18 ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு வெம்பக்கோட்டை யூனியன் ஆலங்குளத்தில் வைகோ பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் என்ற முறையில் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். சோனியாவோ தனது கட்சியை சேர்ந்த 58 வேட்பாளர்களையும் கூட்டணி கட்சியினரையும் தேர்தலில் தோற்கடித்து வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு எதற்காக வாழ்த்து சொல்கிறார். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைப்பதற்காகவே சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளை அழிக்க கருணாநிதியின் ஆதரவு சோனியாவுக்கு தேவை பட்டதால் கூட்டணி வைத்தார். இப்போது அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க நினைக்கிறார்.

தேர்தலில் தோற்று, மகள் கனிமொழியும் சிறையில் இருக்கும் இக்கட்டான நிலையில் நிராயுத பாணியாக இருக்கும் கருணாநிதி பற்றி பேச நான் விரும்பவில்லை. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார், மீண்டும் வந்து போரிடுவார், வெல்வார், ஈழம் நிச்சயம் மலரும்.இவ்வாறு அவர் பேசினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts