background img

புதிய வரவு

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் போலீஸ் பாதுகாப்பை ஏற்பாரா?

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இன்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், அவர் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ.,க் களை பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளதால், அதிக எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட இரண்டாவது பெரிய கட்சியாக தே.மு.தி.க., உருவெடுத்துள்ளது. தே.மு.தி.க.,வின் இந்த எதிர்பாராத வெற்றியால், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. நேற்று ச.ம.க., தலைவர் நடிகர் சரத்குமார், விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, விரைவில் நடக்கவுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். விவசாய சங்கத்தினர், போலீஸ் உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பல தரப்பட்டவர்களும் விஜயகாந்திற்கு நேரிலும், தொலைபேசி வழியாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

தே.மு.தி.க., தலைமை அலுவலக செய்திக்குறிப்பில்,"தே.மு.தி.க., சட்டசபை தலைவராக விஜயகாந்த், துணைத் தலைவராக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கொறடாவாக கொள்கை பரப்பு செயலர் சந்திரகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்பவர்களுக்கு, அமைச்சர் அந்தஸ்தில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட அரசு வாகனம், போலீஸ் பாதுகாப்பு, அரசு வீடு ஆகியவை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், விஜயகாந்த், போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார் என அக்கட்சியினர் ஆணித்தரமாக தெரிவிக்கின்றனர். இதனால், விஜயகாந்த் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வாரா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts