background img

புதிய வரவு

கருணாநிதி 12வது முறையாக வெற்றி

சென்னை : சட்டசபை தேர்தலில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தி.மு.க., தலைவர் கருணாநிதி. தற்போது, 12வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில், 1957ம் ஆண்டு முதன் முதலாக குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாநிதி. தொடர்ந்து தஞ்சாவூர், சைதாப்பேட்டை, அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம் என போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார். 12வது முறையாக, தன் சொந்த ஊர் அடங்கியுள்ள திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

தமிழக முதல்வராக பதவி வகித்த காமராஜர், அண்ணாதுரை, ஜெயலலிதா, ஜானகி எம்.ஜி.ஆர்., ஆகியோர் கூட தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தது உண்டு. விருதுநகர் தொகுதியில் காமராஜர், காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணாதுரை, பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு தோல்வியடைந்தனர். ஆனால், இதுவரை போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று, தமிழக அரசியல் கட்சித் தலைவர்களில் தொடர்ந்து 12வது முறையாக வெற்றி பெற்றிருப்பவர் தி.மு.க., தலைவர் கருணாநிதி மட்டும் தான்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts