background img

புதிய வரவு

பனிக்கால சரும பராமரிப்பு


சருமம் பனிக் காலத்தில் வறண்டு போகும். உதடுகள் வெடிக்கும். கை, கால்களில் நிறம் மாறும். அதற்கு காரணம், சருமத்திற்கு தேவையான ஈரத்தன்மை, எண்ணைத் தன்மை போன்றவற்றை வழங்கி, சருமத்தை மினுமினுப்பாக வைத்திருக்கும் சில வகை சுரப்பிகளின் செயல்பாடுகள் பனிக்காலத்தில் மட்டும்  குறைத்து    விடும். 
 
இந்த காரணங்கலால்   சுரப்பிகள் தரும் ஈரத்தன்மையும், எண்ணைத் தன்மையும் சருமத்திற்குக் கிடைக்காமல் போய் விடும்கிறது    இதனால் சருமம் வறண்டு  போய்  பொலிவு   இழந்து    தோலில் சுருக்கங்களும், மாற்றங்களும் ஏற்படுகின்றன.
 
குளிர்காலத்தில் உதடுகள் தான்   அதிகமாக பாதிக்கப்படுகிறது. உடலில் மிகவும்  மென்மையான பகுதி உதடு  அதனால் பனிக்காலத்தில் அதிகமாக பாதிப்புகள் ஏற்படுகிறது.
 
பனிக் காலத்தில் ஆரோக்கியத்தோடு  பெண்கள் உணவு, உடற்பயிற்சி, உடல் பராமரிப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. பனிக் காலத்தில் உடல் சூடு   குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.     அதனால் சற்று அதிக  ஆரோக்கியமான  உணவுகளை சாப்பிட வேண்டும்.
 
உணவு சத்துடனும், சூடாகவும் இருப்பது  நல்லது. கோதுமை, முந்திரி பருப்பு பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அரிசி, ஆகிய உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உடல் சூடு பாதுகாக்கபடுகிறது. உடலில் தேங்காய் எண்ணையை தேய்த்து குளிப்பது நல்லது.
 
சோப் ஷாம்புவை தவிரப்பதும் மிகவும்  நல்லது. கடலை மாவு, பாசிபயறு மாவு பயன்படுத்தலாம். பனிக் காலத்தில் வாரத்தில் 3   முறையாவது எண்ணை தேய்த்துக் குளிக்க  வேண்டும். தூங்குவதற்கு முன் உதட்டில் வெண்ணை தடவலாம்.
 
பனிக் காலத்தில் பெண்களுக்கு பாதங்களிலும் வெடிப்பு ஏற்படும். வெடித்த இடத்தில்   எலுமிச்சம் பழத்தை தேய்த்து  வந்தால்  வெடிப்பு ஓரளவு கட்டுபடும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பாதங்களை 20   நிமிடங்களுக்கு  உப்பு கலந்த நீரில் வைத்தால் பாத வெடிப்புகள் மறையும்.
 
முறையான உடற்பயிற்சிகளை செய்து, உடல் நன்றாக வியர்த்து விட்டால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அழகும் கிடைக்கும்.


பழங்களின் பயன்கள்


தர்பூசணிப்பழச் சாறு:
 
இந்த பழம்   நீரிழிவு வியாதியை கட்டுப்படுத்தும்    தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து  சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும். சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் இந்த பழத்தை சாப்பிடுவதால் குணமாகும்
 
ஆப்பிள்பழச்சாறு:
 
குழந்தைகளுக்கு ஆப்பிள் உடல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
ஆப்பிள் பழச்சாறுடன் தேனும், ஏலம் ஆகியவற்றை கலந்து  சாப்பிட்டு வர ரத்த சோகை குணமாகும். மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை  மீண்டும் பெறலாம்.
 
ஆரஞ்சுச்சாறு:
 
இந்த  பழத்தை  தொடர்ந்து  சாப்பிடுபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம்  ஆக கூடியது     இருதய நோய்கள் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாக  இந்த பழம் உதவுகிறது.ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து   குடித்தால்    சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீரக குறைபாடுகளும்  குணமாகும். குழந்தைகளுக்கு  குடல் பலம்  பெற இந்த பழம்  கொடுக்கலாம். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.
 
எலுமிச்சைச்சாறு:
 
பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை  நீக்கவும்  பயன்படுகிறது. இதை  தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள்  குணமாகும்
 
தக்காளிச்சாறு:
 
தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் தேவை இல்லாத சதைகளும் குறையும். இந்த சாறுடன் தேன் கலந்து  சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.


ரவா தோசை



தேவையான பொருட்கள்
மைதா - 1/2 கப்
ரவை - 1/2 கப்
அரிசி மாவு - 1/ 2கப்
மிளகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் 50g பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது
இஞ்சி சிறிய துண்டு
தயிர் 1 / 2 கப்
செய்முறை
அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.1 மணி நேரத்திற்கு பிறகு தோசை கல்லில் ஊற்றி எடுக்கவும்.பின் பரிமாறவும்.இது மிகவும் சுவையாக இருக்கும்.இதற்கு புதினா சட்னி,தக்காளி சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.

கதையை தேர்வு செய்வதில்,கெட்டி!


சூர்ய நடிகரும், அவருடைய தம்பி நடிகரும் கதைகளை தேர்வு செய்வதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் என்று டைரக்டர்கள் உலகமே பாராட்டுகிறது.
 
இவர்கள் இருவருமே கதை கேட்கும்போது, சிபாரிசு, முக விலாசம் இரண்டையும் பார்ப்பதே இல்லை. நல்ல கதையை கொண்டு வருபவர் யாராக இருந்தாலும், சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். இதுவே இவர்களின் வெற்றிக்கு காரணம் என்று கணிக்கிறார்கள், மூத்த டைரக்டர்கள்! 

நடிகை ரம்பா வீட்டுக்குள் 4 காவலாளிகள் ரகளை: பொருட்களை உடைத்து சூறை



நடிகை ரம்யா வீடு சாலி கிராமம் நவநீதம்மாள் தெருவில் உள்ளது. கடந்த வாரம் ரம்பா வெளியூர் புறப்பட்டு சென்றார். வீட்டில் காவலாளி மட்டுமே இருந்தார்.
ரம்பா வீட்டுக்கு அருகில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்று உள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் நேற்று முன்தினம் இரவு ரம்பா வீடு அருகில் காரை நிறுத்தி, உள்ளே இருந்தபடியே மது அருந்தியதாக தெரிகிறது.
இதை ரம்பா வீட்டு காவலாளி கண்டித்தார். வேறு எங்காவது சென்று மது அருந்தும்படி கூறினார். இதையடுத்து அவருக்கும், தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பிறகு கலைந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில் அந்த 4 பேரும் நேற்று இரவு மீண்டும் ரம்பா வீட்டுக்கு வந்தனர். அவர்கள் 4 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் ரம்பா வீட்டு காவலாளியை தரக்குறைவாக திட்டி தகராறில் ஈடுபட்டனர்.
பிறகு அவர்கள் ரம்பா வீட்டுக்குள் புகுந்து ரகளை செய்தனர். முன் அறை டியூப்லைட்டை அடித்து சூறையாடினார்கள்.தாங்கள் தயாராக கொண்டு வந்திருந்த ஒரு டியூப்லைட்டை மற்றொரு அறைக்குள் தூக்கி வீசினார்கள். கற்களையும் எறிந்து தாக்கினார்கள். பிறகு தப்பி ஓடிவிட்டனர்.
ரம்பா வீட்டு காவலாளி இதுபற்றி இன்று காலை விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில், ரம்பா வீட்டில் ரகளையில் ஈடுபட்ட 4 பேரும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக பணி புரிவது தெரிய வந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராசா- ராடியாவிடம் மீண்டும் விசாரணை; சி.பி.ஐ. போலீஸ் நடவடிக்கை


2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தகவல் வெளியிட்டது.
இதுகுறித்து சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.22 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்து உள்ளதாக சி.பி.ஐ. கருதுகிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்து பிப்ரவரி மாதம் 10-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 8 மற்றும் 15-ந் தேதிகளில் டெல்லி, சென்னை, பெரம்பலூர் நகரங்களில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அரசியல் இடைத்தரகர் ராடியா, ஹவாலா தரகர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது லேப்-டாப்கள், பென் டிரைவ்கள், ஏராளமான ஆவணங்கள், டைரிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினார்கள். டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் அந்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அதில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
கம்ப்யூட்டர் தகவல் ஆதாரங்களின் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய அனைவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் 3 பேர் அப்ரூவராக மாறி பல தகவல்களை வெளியிட்டனர். இதன் தொடர்ச்சியாக தரகர் நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவிடம் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 16 மணி நேரம் நடந்த அந்த விசாரணையில் ஆ.ராசாவிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. கம்ப்யூட்டர் தகவல்களை ஆதாரமாக காட்டி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
ஆ.ராசா மற்றும் தரகர் நீரா ராடியா இருவரும் அளித்த பதில்களை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்திருந்தனர். அந்த பதிவுகளை கடந்த 2 நாட்களாக அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது பல சர்ச்சையான விஷயங்களில் அவர்களுக்கு விடை கிடைக்கவில்லை.
குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விதம், தொலைத் தொடர்புத்துறையில் அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் கொடுத்தது, மற்றும் வங்கி கடன்கள் பெற்றது போன்றவைகளில் சி.பி.ஐ. அதிகாரிளுக்கு இன்னமும் தெளிவான விடை கிடைக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தரகர் நீரா ராடியா இருவரிடமும் மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக ஆ.ராசா, நீரா ராடியா இருவருக்கும் சி.பி.ஐ. விரைவில் அழைப்பு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்தக்கட்ட விசாரணையின்போது ஆ.ராசா - நீரா ராடியா இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பற்றி அதிகம் கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிகிறது. 2008ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தபோது ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றும் தொலை தொடர்பு சேவைக்கான உரிமத்தைப் பெற்றது. இதற்கு முன்பு அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம், தொலை தொடர்பு துறையில் எந்த ஒரு முன் அனுபவம் பெற்றிருக்கவில்லை.
அத்தகைய நிறுவனம் வங்கிகளில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி முதல் ரூ.2,500 கோடி வரை கடன்களைப் பெற்றது. இதில் நீரா ராடியா தரகராக இருந்து பேசியுள்ளார். இதில் நடந்த விதி மீறல்கள் குறித்து ஆ.ராசா, நீரா ராடியா இருவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த 15-ந் தேதி நீரா ராடியா வீட்டில் நடந்த சோதனையின் போது சில கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் இருந்த பல ரகசிய தகவல்கள் ஸ்பெக்ட்ரம் முறை கேட்டுக்கான ஆதாரங்களாக மாறி உள்ளன. அந்த ஆதாரங்களை காட்டி ராடியாவிடம் மீண்டும் விளக்கம் கேட்க உள்ளனர்.
டாடா நிறுவனம் தவிர வேறு எந்த நிறுவனத்துக்கும் தான் பணியாற்றவில்லை என்று நீரா ராடியா கூறி வருகிறார். ஆனால் அவரது தொலைபேசி உரையாடல் பதிவுகளில் அவர் வங்கி கடன், ஹவாலா பண பரிமாற்றம் உள்பட பல விஷயங்களை கையாண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இது பற்றி ஏற்கனவே நீரா ராடியா கொடுத்த விளக்கம் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே நீரா ராடியாவிடம் அடுத்த கட்ட விசாரணை நடத்தும் போது, கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் வங்கிகளில் கடன்கள் பெறுவதற்காக தொலை தொடர்பு துறை அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர். அரசே கடன் கொடுக்க சொல்லியதால் பொதுத்துறை வங்கிகள், 5 தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்களை அள்ளிக்கொடுத்துள்ளன.
இதற்கு காரணமான கையெழுத்திட்ட அதிகாரிகளையும் தற்போது சி.பி.ஐ. விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தும்போது மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று சி.பி.ஐ. எதிர்பார்க்கிறது.
தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகளிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளதால் தற்போது அனைவரது கவனமும், அவர்களது பக்கம் திரும்பி உள்ளது.
இதற்கிடையே ஹவாலா தரகர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்த சி.பி.ஐ. தீர்மானித்துள்ளது. முதல் கட்டமாக 3 நாடுகளில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான பணம் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த நாடுகளின் ஒத்துழைப்பை கோரி சி.பி.ஐ. கடிதம் எழுதியுள்ளது.
இது தவிர ஆ.ராசா, நீரா ராடியா உள்பட பலரிடம் வங்கி கணக்கு பணபரிமாற்ற விபரங்களை சி.பி.ஐ. கேட்டுள்ளது. குறிப்பாக நீரா ராடியா வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ள பணத்துக்கு சி.பி.ஐ. கணக்கு கேட்டுள்ளது.
மற்றொரு புறத்தில் அமலாக்கப் பிரிவும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

தி.மு.க.,விற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் சேலம் மாவட்டம்

முதல்வர் தலைமையில் மாவட்ட வாரியாக நடத்தப்படும் தி.மு.க., கருத்துகேட்பு கூட்டத்தில், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகனும், எம்.எல்.ஏ.,வுமான ராஜா பற்றி சரமாரியான புகார்களை அடுக்க, எதிர் தரப்பு முடிவு செய்துள்ளது. கூட்டத்துக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சட்டசபை தேர்தலில் ஐந்து முறை வெற்றி பெற்றதை காட்டிலும், 2011 தேர்தலில் எப்பாடுபட்டாவது வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில், தி.மு.க., உறுதியாக உள்ளது. நான்கு ஆண்டுகள் பிரச்னையின்றி செயல்பட்ட தி.மு.க., அரசுக்கு, தற்போது நெருக்கடி முற்றியுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் பூதாகரமாக வெடித்துள்ளது, தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட வாரியாக கட்சியினர் கருத்து கேட்பு கூட்டத்தை இரண்டு மாதத்துக்கும் மேலாக, தி.மு.க., தலைமை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட செயலரின் அதிகாரப் போக்கு, கட்சி நிர்வாகிகளை மதிக்காதது, பொதுமக்களிடம் உள்ள அதிருப்தி போன்றவற்றை கட்சியினர் கூறி வருகின்றனர்.
இதுவரை, 18 மாவட்டங்களின் கருத்துகேட்பு கூட்டம் நடந்த நிலையில், இன்னும் 12 மாவட்டங்களுக்கு கூட்டம் நடத்த வேண்டியுள்ளது. இந்த வாரத்தில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் கூட்டம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. சேலம் மாவட்டத்தில், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. லோக்சபா தேர்தலின் போது, அமைச்சரின் ஆட்கள் அங்கம்மாள் காலனியில், 113 பேரின் இடத்தை கைப்பற்ற முயன்ற பிரச்னையை முன்வைத்து, அ.தி.மு.க.,வினர் செய்த பிரசாரத்தால், அக்கட்சி எளிதாக வெற்றி பெற்றது. 11 சட்டசபை தொகுதியிலும் குறைவான ஓட்டுக்களையே தி.மு.க., கூட்டணி பெற்றது. சேலம் மாநகரப் பகுதிகளில் ஓட்டு சதவீதம் வெகுவாக சரிந்திருந்தது.
இந்த சூழலில், அமைச்சரின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மூலம் நடந்த நில ஆக்கிரமிப்பு, கட்டப்பஞ்சாயத்து, சொத்து அபகரிப்பு, ரவுடியிசம் போன்ற சம்பவங்கள், தி.மு.க., மீதும், அமைச்சர் தரப்பு மீதும் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அமைச்சரின் தம்பி மகன் சுரேஷ்குமார் கைதானதும், சேலம் மத்திய சிறைக்கு சென்று, அவரை அமைச்சர் நேரில் சந்தித்து வந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்ட தேர்தல் பார்வையாளராக வந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும், செயல்வீரர் கூட்டங்களில் பங்கேற்று மகிழ்ச்சியில்லாமல் வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் கைப்பற்ற, அ.தி.மு.க., கூட்டணி மும்முரமாக உள்ளது. அமைச்சர் மீது உள்ள குற்றச்சாட்டுக்களை பிரசாரம் மூலம் எடுத்துரைத்து, எளிதாக வெற்றியை பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க., உள்ளது.
இதையெல்லாம் பட்டியலிட்டு, அமைச்சருக்கு எதிராக தி.மு.க.,வில் செயல்படும் ஒரு தரப்பு, கருத்து கேட்பு கூட்டத்தில் எடுத்துக்கூறி, தி.மு.க., தலைமை ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும், தி.மு.க.,வுக்கு தற்போதைய சூழ்நிலையில், பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் தான். இப்பிரச்னைக்கு முதல்வர் கருணாநிதி எவ்வாறு நிவாரணம் தேடுவார் என்பது தான், தி.மு.க.,வினரிடம் பரபரப்பாக நடைபெறும் விவாதமாகி விட்டது.
-நமது சிறப்பு நிருபர்-


தணிக்கை துறை அதிகாரியிடம் எம்.பி.,க்கள் கேள்வி : ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு எப்படி என விசாரணை

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது எப்படி என, மத்திய தணிக்கை துறை அதிகாரியிடம், பார்லிமென்ட் பொதுக் கணக்குக் குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர். ஸ்பெக்ட்ரம் தொடர்பான ஆவணங்களையும் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக, அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அறிக்கை அளித்தது. இதைத் தொடர்ந்து, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா, பதவி விலகினார். "இந்த விவகாரம் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியதால், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் முற்றிலும் முடங்கியது.

மத்திய தணிக்கை துறை அதிகாரி ஆஜர்: இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, பார்லிமென்ட் பொதுக் கணக்குக் குழு நேற்று விசாரணை நடத்தியது. அப்போது, மத்திய தணிக்கை துறை அதிகாரி வினோத் ராய், நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். குறிப்பாக, 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக, ஏற்கனவே அளித்த அறிக்கையில் குறிப்பிட்டது குறித்து விளக்கமளித்தார். பொதுக் கணக்குக் குழுவில் இடம் பெற்றுள்ள எம்.பி.,க்கள், இதுகுறித்து சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அரசுக்கு இழப்பு ஏற்பட்டது எப்படி, இதில் தொடர்புடையவர்கள் யார், விதிமுறைகள் மீறப்பட்டனவா, விதிமுறை மீறலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் யார் என்பது போன்ற, சந்தேகங்கள் குறித்தும், தணிக்கை துறை அதிகாரியிடம் எம்.பி.,க்கள் கேட்டனர். இதற்கு அவர் விளக்கம் அளித்தார். அத்துடன் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களையும் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

விசாரணைக்கு பிரதமர் தயார்: இந்நிலையில், பார்லி.,பொதுக் கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், "ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, பார்லி., பொது கணக்குக் குழு முன், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயார்' என, தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த கடிதத்தை, லோக்சபா சபாநாயகர் மீரா குமாருக்கு, முரளி மனோகர் ஜோஷி பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமரை நேரில் அழைத்து பொதுக்கணக்கு குழு விசாரிக்குமா: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக பார்லிமென்ட் பொதுக் கணக்குக் குழு நேற்று விசாரணை நடத்தியது. பொதுக் கணக்குக் குழு முன், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயார்' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். லோக்சபா விதிமுறைகளின்படி, பொதுக் கணக்குக் குழு, தனது எந்த ஒரு விசாரணைக்காகவும், அமைச்சர், பிரதமர் பதவியில் உள்ளவர்களை நேரில் அழைத்து விசாரிக்க முடியாது. அவர்களிடம், தகுந்த ஆதாரங்களை அளிக்கும்படியும் கேட்க முடியாது. பொதுக் கணக்குக் குழு தலைவர் விரும்பினால், சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசிக்கலாம்.இதுவரை எந்த ஒரு பிரதமருமே, பொதுக் கணக்குக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்காத சூழலில், தற்போது மன்மோகன் சிங், நேரில் ஆஜராக தயார் என, கடிதம் எழுதியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.



முக நூல்

Popular Posts