background img

புதிய வரவு

லஞ்சம் கொடுக்க 53% இளைஞர்கள் தயார்: எம்டிவி கணக்கெடுப்பு

டெல்லி: இந்தியாவில் உள்ள இளைஞர்களில் 53 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதில் தப்பில்லை என்று தெரிவித்துள்ளதாக எம்டிவி நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஊழல் புகார்களில் சிக்கித் தவிக்கிறது. ஊழலை எதிர்த்து அமைக்கப்பட்டுள்ள லோக்பால் குழு இரண்டு முறை கூடிவிட்டது. இந்நிலையில் எம் டிவி இளைஞர்களிடம் ஊழல் பற்றிய கருத்துகளைக் கேட்டறிந்தது.

அன்மையில் ஊழலை எதிர்த்து ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் அதில் பலர் சொல்வது வேறு செய்வது வேறாக உள்ளது. எம்டிவி 13 நகரங்களில் உள்ள 18 வயது முதல் 25 வயதுடைய 2 ஆயிரத்து 400 இளைஞர்களிடம் கணக்கெடுத்தது. இதில் 53 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்கலாம் என்றும், 39 சதவீதத்தினர் லஞ்சம் வாங்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் முன்னேற செக்ஸ் தேவைகளை நிறைவேற்றலாம் என்று 47 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.

எம்டிவி சேனல் தலைவர் ஆதித்யா சாமி கூறுகையில்,இன்று அனைவரும் ஜெயிக்க விரும்புகிறார்கள். அவர்கள் வெற்றி பெறாவிட்டால் பலனில்லை. 90 சதவீதம் பேர் தங்கள் பெற்றோரை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதனால் அவர்கள் புது வழிகளைத் தேடுகின்றனர்.

பணம் ஏன் அவ்வளவு முக்கியம் என்பது தான் கேள்வி. 85 சதவீதம் பேர் பணம் அதிகாரத்தை தருவதாக நினைக்கின்றனர். 64 சதவீதத்தினர் கவர்ச்சியளிப்பதாகவும், 90 சதவீத இளைஞர்கள் பணம் தான் மகிழ்ச்சிக்கு வழிவகுப்பதாகவும் கருதுகின்றனர்.

அப்படி என்ன லஞ்சம் கொடுத்து பணம் சம்பாதிப்பது என்று கேட்டதற்கு வெற்றிக்கு குறுக்கு வழியைத் தேடுவதாக 60 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts