background img

புதிய வரவு

ஏற்காட்டில் டாக்டர் ராமதாஸ் குடும்பத்துடன் ஓய்வு

திண்டிவனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஓய்வெடுப்பதற்காக தனது குடும்பத்துடன் ஏற்காடு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஓய்வுக்காக தங்களது குடும்பத்தினருடன் வெளிநாடு சென்றுள்ளனர். சிலர் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், கோடை வாச ஸ்தலங்களுக்கும் சென்று ஓய்வு எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (2-ம் தேதி) டாக்டர் ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் சேலம் அருகில் உள்ள ஏற்காட்டில் ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்.

அவருடன் அவரது மனைவி, மகன், மகள்கள், மருமகள், மருமகன்கள், பேரன், பேத்திகள், சகோதரி குடும்பத்தினர் என மொத்தம் 30 பேர் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் வரும் 7-ம் தேதி திண்டிவனம் திரும்புவார்கள் என்று கூறப்படுகின்றது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts