background img

புதிய வரவு

பாவங்கள் போக்கும் பங்குனி உத்திர விரதம்

தெய்வீக அற்புதங்கள் பல பெற்ற பங்குனி உத்திர திருநாள் பாவத்தை போக்கும் அற்புத நாளாகவும் பகையை அகற்றும் திருநாளாகவும் திகழ்கிறது. இன்றைய நாளில் அதிகாலை நீராடி மனத் தூய்மையோடு விரதம் இருந்து அருகிலிருந்தும் ஆலயங்கள் சென்று தெய்வக் கல்யாணங்களை கண்டு தரிசிப்பதோடு வீட்டிலும் விரத பூஜைகள் செய்வது சிறப்பு.

* பங்குனி உத்திரத்தில் சிவ பார்வதி படத்தை அலகரித்து சிவபார்வதி கல்யாண மூர்த்தியாக பாவித்து வழிபாடு செய்தல் வேண்டும் குத்து விளக்கேற்றி வைத்து, தாம்பூலத்தோடு சித்ரான்னங்கள்,சர்க்கரைப் பொங்கலோடு நைவேந்தியம் படைத்து வழி பட வேண்டும். இன்றைய தினம் திரு விளக்கு தீபத்தில் சிவ பார்வதி இருவரும் ஐக்கிய சொரூபமாக எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே விளக்கு பூஜை செய்து நம்பாவங்கள் அகன்று மங்களம் கைகூடப் பெறலாம்.

* கந்தக் கடவுளுக்கும் உரிய திருநாள் ஆதலால் ஆலய தரிசனத்தோடு இல்ல வழிபாட்டின் போது சஷ்டிக் கவசம் சொல்லி முருகனையும் வழிபட்டுச் சிறக்கலாம்.

*ஸ்ரீ மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுஷ்டித்துதான் ஸ்ரீ மகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாராம் எனவே இன்று விரதம் இருந்து பெருமானை பூஜித்து அடியவர்களும் மணப்பாக்கியம் பெறலாம்.

* மேலும் தேவேந்திரன்- இந்திராணி திருமணம். நான் முகன் கலைவாணி திருமணம் ஆகியவைகளும் இந்த பங்குனி உத்திரத்தின் பலனால் தான் நடை பெற்றனவாம். நாமும் இந்நாளில் விரதம் இருந்து தெய்வீக திருவருள் பெறுவோம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts