background img

புதிய வரவு

ஐ.பி.எல்., தொடர்: சேவக் திடீர் விலகல்


புதுடில்லி: தோள்பட்டை காயத்துக்கு "ஆப்பரேஷன்' செய்ய, லண்டன் செல்வதால், ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார் சேவக்.
ஐ.பி.எல்., தொடரில் டில்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக இந்தியாவின் சேவக் உள்ளார். இதுவரை நடந்த போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் (424) இருக்கிறார்.
ஏற்கனவே தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட சேவக்கிற்கு, மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியின் போது வலி அதிகமானது. இதனால், காயத்துக்கு "ஆப்பரேஷன்' செய்ய, உடனடியாக லண்டன் செல்கிறார்.
ஹோப்ஸ் கேப்டன்:
இதுகுறித்து டில்லி அணியின் தலைமை அதிகாரி அம்ரீட் மாத்தூர் கூறுகையில்,"" தனது காயத்துக்கு சேவக் "ஆப்பரேஷன்' செய்ய இருப்பதால், எஞ்சியுள்ள ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடமாட்டார். இதற்கான ஏற்பாடுகளை, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செய்து வருகிறது. ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் எஞ்சியுள்ள 3 போட்டிகளுக்கு, ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் ஹோப்ஸ் கேப்டனாக செயல்படுவார்,'' என்றார்.
டில்லி அணி இதுவரை 11 போட்டிகளில் 4ல் மட்டுமே வென்று, அடுத்த சுற்று வாய்ப்புக்கு போராடும் நிலையில், சேவக்கின் வெளியேற்றம் மேலும், சிக்கலை ஏற்படுத்தும். தவிர, எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில், இவர் பங்கேற்பது சந்தேகம் தான்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts