background img

புதிய வரவு

கோவிலில் வழிபட்டு மருத்துவமனைக்கு திரும்பிய ரஜினிகாந்த்!

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவர்களின் அனுமதியோடு செவ்வாய்க்கிழமை அன்று காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு திரும்பினார்.


ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் 29ந் தேதி மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சிகிச்சைக்குப் பின் குணமடைந்து அன்று மாலையே வீடு திரும்பினார். டாக்டர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.

இதற்கிடையில் கடந்த 4ந் தேதி மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர பிரிவில் வைத்து ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் கிஷோர் ஆகியோர் சிகிச்சை அளித்தார்கள்.

காய்ச்சலும், இருமலும் இருப்பதாக கூறப்பட்டது. மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றனர். ஆனால் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.



இன்று 7வது நாளாக ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மகள் ஐஸ்வர்யா தெரிவித்தார். தினமும் அதிகாலையில் எழுந்து மருத்துவமனைக்கு உள்ளேயே ரஜினி நடைபயிற்சி மேற்கொண்டார்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை மருத்துவர்களின் அனுமதியோடு பாம்பன் சுவாமி கோயிலுக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் காளிகாம்பாள் கோயிலில் அவர் வழிபட்டு மருத்துவமனை திரும்பினார்.


நடிகர் ரஜிகாந்த் உடல் நலம் தேறி வருவதாகவும், மருத்துவர்களின் கவனிப்புக்காகவே அவர் மருத்துவமனையில் இருந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் மூன்று நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts