background img

புதிய வரவு

விமான நிலையத்தில் சூட்கேஸ்களில் புலி குட்டிகளை கடத்திய பயணி

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல விமானம் தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது முதல் வகுப்பில் செல்ல முன்பதிவு செய்து இருந்த பயணி ஒருவரின் சூட்கேஸ்களை சோதனையிட்டபோது அதில் புலிக்குட்டிகளும், சிறுத்தை குட்டிகளும் இருந்தன.

இதைப்பார்த்து விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பயணி புலிக்குட்டிகளை தாய்லாந்தில் இருந்து துபாய்க்கு கடத்தி செல்ல இருந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து அந்தப் பயணியை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட புலிக்குட்டிகளை மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts