background img

புதிய வரவு

"காதல், வாழ்வை நாசமாக்கி விடும்” -நடிகை பாவனா

“சித்திரம் பேசுதடி” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பாவனா. தீபாவளி, அசல், ஜெயங் கொண்டான் படத்திலும் நடித்தார். மலையாளம், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

அவர் சொல்கிறார், சினிமாவில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இங்கு கதாநாயகிகள் சீக்கிரமே காணாமல் போய் விடுகின்றனர். நடிகர்கள்தான் ரொம்ப நாள் நிலைத்து இருக்கிறார்கள். நடிகைகள் மார்க்கெட் போனதும் திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பிறகு கணவர், குடும்பம், குழந்தை என வாழ்க்கை முடங்கி போகிறது.

சினிமாவில் காதல் காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் நிஜத்தில் காதல் பற்றி எதுவும் தெரியாது. காதலித்தால் வாழ்க்கை நாசமாகி போகும். சிலர் காதலுக்காகவே உயிரை விடுகின்றனர். இதுபோன்ற செயல்களை நான் வெறுக்கிறேன். சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts