background img

புதிய வரவு

தேர்தல் முடிவுக்கு பிறகு தங்கபாலு நீக்கப்படுவது உறுதி: நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி

தேர்தல் முடிவுக்கு பிறகு தங்கபாலு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார். நடிகரும், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் தனது மகன் நடிகர் அஸ்வின் சேகர் திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழை கொடுக்க காரைக்குடி வந்தார். மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்தார்.

பின்னர் மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடந்த முடிந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 140 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. இந்த தேர்தல் எதிர்ப்பலைகள் இல்லாத தேர்தல். அரசு நலத்திட்டங்கள் மக்களிடம் பரவலாக சென்றுள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு உள்ள ஒரு மாத இடைவெளி வேட்பாளர்கள் தங்களது மனதை பக்குவப்படுத்தி கொள்ள வசதியாக இருக்கும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் 63 தொகுதிகளை போராடி பெற்றனர். ஆனால் தங்கபாலு வேட்பாளர்கள் தேர்வு மூலம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை அழித்து விட்டார்.

தங்கபாலு காங்கிரஸ் கட்சியின் உண்மை விசுவாசிகள் 19 பேரை நீக்கம் செய்து அறிவித்தார். தற்போது இடைநீக்கம் என்று கூறுகிறார். தேர்தல் முடிவுக்கு பிறகு தங்கபாலு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி. அரசியல் வியாபாரம் அல்ல. அரசியல் மூலம் நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளை அதிகப்படுத்த விரும்பினேன். எதிராளிகளை சம்பாதிக்க அல்ல. சமூக சேவையில் ஈடுபட அரசியல் பதவி பயன்பட்டது.

மயிலாப்பூர் தொகுதியில் ரூ.330 கோடி செலவில் அரசின் நலத்திட்டங்களை செய்துள்ளேன். இதில் ஒரு பைசா கூட கமிஷனாக பெறவில்லை. தேர்தல் முடிவுக்கு பிறகு சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை கொடுக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts