background img

புதிய வரவு

சென்னையில் ஒரு திருப்பதி

ஸ்தல வரலாறு:

திருமலை திருப்பதி தேவஸ்தான செய்தி மையம் தி.நகரில் இயங்குகிறது. இம்மையம் 1969 ஆண்டு முதல் இயங்குகிறது. இது பக்த பெருமக்களால் வெங்கடேஸ்வரா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு வெங்கடாஜலபதி சுவாமிக்கு சிலை இல்லை. ஆனால் அதை வேலைப்பாடுடன் கூடிய வெங்கடாஜலபதி ஆஜானுபாகுவாக உள்ளார். இது ஒரு தரிசன கூடம். அவ்வளவே.

வழிபாடுகள்:

வெங்கடாஜலபதியின் பிறந்த நட்சத்திரமான ஸ்ரவண நட்சத்திரம் வரும் நாளில் இங்கு மாதா மாதம் பக்தி பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது மட்டுமின்றி ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மாலையிலும் பக்தி பாடல் நிகழ்ச்சி இங்கு நடைபெறுகிறது.

இங்கு ஒரு சிறப்பு என்னவெனில்- தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு சுப்ரபாதத்தை கோவில் பெரியவர்களே பாடி மகிழ்கிறார்கள்- ஒலி நாடா ஒலிப்பதில்லை.

திருப்பதிக்குச் சென்று வெங்கடேசப் பெருமானை கண்டு களித்து, மகிழ்ந்து அருள் பெற இயலாத பலர் இந்த மையத்திற்கு வந்து வெங்கடாஜலபதியை நாள் தோறும் தரிசனம் செய்து அருள் பெறுகின்றனர்.

நடை திறக்கும் நேரம்:

தினமும் காலை முதல் மணி வரையும் மாலை முதல் மணி வரையும் திறந்திருக்கும்.மேலும் ஒவ்வொரு ஞாயிறும் காலை ஐந்து மணிக்கே நடை திறந்திருக்கும்.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல அனைத்து பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. தி.நகர் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த கோவிலுக்கு செல்லும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts