background img

புதிய வரவு

தடையை மீறி கருத்துக் கணிப்பு வெளியிட்ட டிவி மீது நடவடிக்கை-தேர்தல் ஆணையம்

சென்னை: தேர்தல் ஆணையத்தின் தடையை மீறி கருத்துக் கணிப்பு வெளியிட்ட டிவி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த டிவிக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது.

மே 10ம் தேதி மாலை வரை தேர்தல் கருத்துக் கணிப்புகளை எந்த ரூபத்திலும் வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இருப்பினும் கடந்த 28ம் தேதியன்று தனியார் தொலைக்காட்சி ஒன்று கருத்துக் கணிப்பு ஒன்றை வெளிட்டது. அதில் தமிழகத்தில் லேசான மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் மாநிலத்திற்கும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டிருந்தது.

இதையடுத்து நடத்தை விதிமுறையை மீறி கருத்துக் கணிப்பு வெளியிட்ட அந்த டிவியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.

மதுரையில் பிரவீண்குமார்:

இதற்கிடையே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் அலுவலர்களுக்கு ஐந்து மண்டலத்தில் நேரடியாக சென்று பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த பயிற்சி வகுப்பு நடத்துவதற்காக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர் இன்று காலை மதுரை வந்தனர்.

அவர்கள் மதுரை மாவட்டத்தின் 7 சட்டசபை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள மதுரை மருத்துவ கல்லூரிக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

பின்பு மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வாக்கு எண்ணிக்கை குறித்து பயிற்சி அளித்தார்.

அப்போது, மதுரை மத்திய தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் டப்ளை செய்தது தொர்பாக குறித்த புகாரின் பேரில் மீண்டும் தேர்தல் நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் சகாயத்துடன் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts