மறைந்த அருணாச்சல முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டுவின் உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர். காண்டுவும் அவருடன் சென்ற 4 பேரும் ஏப்ரல் 30-ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.
காண்டுவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த மன்மோகன் சிங், சோனியாகாந்தி மற்றும் சிதம்பரம் ஆகியோர் தில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அசாம் விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் இடாநகர் ராஜ்பவன் ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்கினர். பின்னர் மூவரும் நேராக காண்டுவின் நிதின் விஹார் இல்லத்துக்கு சென்றனர். சுமார் 20 நிமிடங்கள் அவர்கள் காண்டுவின் இல்லத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவித்தன. மூவரும் வருவதற்கு முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் காண்டுவின் இல்லம் அருகே குழுமியிருந்தனர்.
காண்டுவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த மன்மோகன் சிங், சோனியாகாந்தி மற்றும் சிதம்பரம் ஆகியோர் தில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அசாம் விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் இடாநகர் ராஜ்பவன் ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்கினர். பின்னர் மூவரும் நேராக காண்டுவின் நிதின் விஹார் இல்லத்துக்கு சென்றனர். சுமார் 20 நிமிடங்கள் அவர்கள் காண்டுவின் இல்லத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவித்தன. மூவரும் வருவதற்கு முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் காண்டுவின் இல்லம் அருகே குழுமியிருந்தனர்.
0 comments :
Post a Comment