background img

புதிய வரவு

சத்தியமங்கலத்தில் பரபரப்பு: தேர்தல் தோல்வியால் தி.மு.க. தொண்டர் தற்கொலை; நடுரோட்டில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோவிந்த ராஜபுரத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 49). நெசவுதொழிலாளியான இவர் தி.மு.க. வின் தீவிர தொண்டர். இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்ததை அறிந்த அவர் மனமுடைந்தார். இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய தனபால் அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி கொண்டு வீடு திரும்பினார். பின்னர் இரவு 8 மணிக்கு திடீரென நடுரோட்டுக்கு வந்து கையில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

அடுத்த நொடி தீ உடலில் வேகமாக பரவி அலறியபடி அங்கும் இங்கும் ஓடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

அப்போது, தனபால் டாக்டர்களிடம் தி.மு.க.வே தோற்று விட்டது. நான் இறப்பதற்கு தான் தீக்குளித்தேன் என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சத்தியமங்கலம் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை அளித்தனர். ஆனால் சில மணிநேரங்களில் தனபால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். அவர் தீக்குளித்த நிலையிலேயே 80 சதவீதம் உடல் வெந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தி.மு.க. தொண்டர் தற்கொலை பற்றி தகவல் அறிந்த சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வேலுச்சாமி, நகர தி.மு.க. துணை செயலாளர் மூர்த்தி மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இறந்த தனபாலுக்கு வசந்தா (40) என்ற மனைவியும், கீர்த்தனா(17) என்ற மகளும், தம்பிதுரை(15) என்ற மகனும் உள்ளனர்.

இதுபற்றி சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts