background img

புதிய வரவு

சரண்யா பொன்வண்ணனுக்கு தேசிய விருது!

இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான தேசிய விருதுகள் டில்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு தமிழ் நடிகர் தனுஷூம், சிறந்த நடிகைக்கான விருதுக்கு தமிழ் நடிகை சரண்யா பொன்வண்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறந்த துணை நடிகருக்கான விருது மைனா படத்தில் நடித்ததற்காக தம்பி ராமையாவுக்கு கிடைத்திருக்கிறது.

58வது தேசிய விருதுகள் விபரம்:

சிறந்த நடிகருக்கான விருது, சலிம் குமார் மற்றும் தனுஷ்க்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த நடிகைக்கான விருது, "தென்மேற்கு பருவக்காற்று" படத்திற்காக சரண்யா பொன்வண்ணனுக்கும், "பாபூ பந்த் பாஜா" படத்திற்காக மராட்டிய நடிகை மிடாலிக்கும் கிடைத்திருக்கிறது.

சிறந்த துணை நடிகருக்கான, விருது "மைனா" படத்திற்காக தம்பி ராமையாவுக்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த துணை நடிகைக்கான விருது, "நம் கிராமம்" என்ற படத்திற்காக சுகுமாரிக்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த தமிழ் படத்திற்கான விருது "தென்மேற்கு பருவக்காற்று" படத்திற்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இயக்குநருக்கான தங்கத்தாமரை விருது, வெற்றி மாறனுக்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த நடனத்திற்கான விருது, தினேஷ் குமாருக்கு கிடைத்திருக்கிறது.

இந்திய அளவில் சிறந்த படத்திற்கான விருது, மலையாளத்தில் வெளிவந்த "அதாமந்தே மகன் அபு" படத்திற்கு கிடைத்திருக்கிறது.

இந்திய அளவில் சிறந்த பொழுதுபோக்கு படமாக சல்மான் நடித்த "தபாங்" படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த அறிவியல் படத்திற்கான விருது, "ஹார்ட் அன்ட் ஹார்ட்" படத்திற்கு கிடைத்திருக்கிறது

சிறந்த விளையாட்டு படத்திற்கான விருது, "பாக்சிங் லேடிஸ்" படத்திற்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த கலை மற்றும் கலாச்சார படத்திற்கான விருது, "லிவிங் ஹோம்" படத்திற்கு கிடைத்திருக்கிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts