background img

புதிய வரவு

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: 3-வது குற்றப்பத்திரிகை அடுத்த மாதம் தாக்கல்

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதுவரை இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதன் முதலாக கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா ஆகியோர் கைதானார்கள்.

பிறகு டிபிரியாலிட்டி நிறுவன இயக்குனர் பல்வா கைதானார். இதையடுத்து தனியார் தொலைத் தொடர்புத் துறை நிறுவன உயர் அதிகாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு பல்வா தம்பி, ஒரு இடைத்தரகர், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கரீம் மொரனி ஆகியோர் கைதானார்கள்.

நேற்று கனிமொழி, சரத்குமார் கைது செய்யப்பட்டுள்ள தொடர்ந்து இது வரை ஸ்பெக்ட்ரம் வழக்கில் 14 பேர் கைதாகி உள்ளனர். இவர்களில் கரீம் மொரனி தவிர மற்ற 13 பேரும் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக 3-வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தயார் செய்து வருகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 2-வது வாரம் அல்லது மாத இறுதியில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதில் லூப் டெலிகாம் மற்றும் எஸ்ஸார் நிறுவனத்திடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் இடம் பெறும்.

லூப் டெலிகாம் நிறுவனம் முறைகேடாக 21 உரிமங்கள் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு மேலும் சில தனியார் தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts