background img

புதிய வரவு

ஜல்லிக்கட்டு: சட்ட திருத்தம் மட்டுமே காப்பாற்றும்


“இத்தனை முன் நடவடிக்கைகள் எடுத்தும், ஜல்லிக்கட்டில் ஈடுபடுவோர் உயிரிழக்கும் நிலை தொடர்ந்தால், அதனை ஏன் தடை செய்யக்கூடாது? ஒவ்வொரு ஆண்டும் இப்படி அவர்கள் உயிரிழப்பதும், காயம்படுவதையும் அனுமதிக்க முடியாது” என்று இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டிற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கை செவ்வாய்க் கிழமை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வி.இரவீந்திரன், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கொண்டு நீதிமன்ற அமர்வு இவ்வாறு எச்சரித்துள்ளது.

இவ்வழக்கில் மத்திய விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக நேர் நின்ற வழக்கறிஞர் விஜய் பஞ்வானி, இநத ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தின் போது, ஜனவரி 15 முதல் 19ஆம் தேதிவரை, ஒன்பது இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், 215 போட்டியாளர்களும், 214 பார்வையாளர்களும் காயமுற்றுள்ளனர் என்று கூறியுள்ளதோடு, “இப்போட்டியில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகளை வைத்து இந்த விளையாட்டையே காட்டுமிராண்டித்தனமானது என்று கூறலாம் என்று கூறிவிட்டு, ஜல்லிக்கட்டிற்குத் தடை விதிக்க வேண்டும” என்று வாதிட்டுள்ளார்.

வழக்கு எதற்கு? காளையை காப்பாற்றவா? மனிதரைக் காக்கவா?


2008ஆம் ஆண்டு விலங்குகள் நல வாரியம் இந்த வழக்கைத் தொடர்ந்தபோது அது கூறிய மிக முக்கியமான காரணம்: ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகள் துன்புறுத்தலிற்குள்ளாகின்றன, அதனை அனுமதிக்க முடியாது என்பதே. அந்த ஒற்றை அடிப்படையில்தான் இந்த வழக்கு அப்போது தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஆனால் விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக நேர் நின்று வாதிட்டுள்ள வழக்கறிஞர் விஜய் பஞ்வானி, பொங்கல் பண்டிகையின் போது நடந்த 9 ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 2 பேர் உயிரிழ்ந்தனர், 215 போட்டியாளர்கள் காயமுற்றனர் என்றுதான் கூறியுள்ளாரே தவிர, இதில் ஈடுபடுத்தப்பட்ட காளைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றே கூறியுள்ளார். அப்படித்தான் பல நாளிதழ்கள் - தமிழனுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டுவரும் ஒரு ஆங்கில நாளிதழைத் தவிர - செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஆனால், நீதிபதிகள் இருவரும், அந்த அடிப்படையை விட்டுவிட்டு, அதில் களமிறங்கும் காளையர்கள் உயிரிழக்கின்றனரே என்று கேட்டுவிட்டு, அதனடிப்படையில் ஏன் தடை விதிக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். இது அடிப்படையில் வழக்கை திசை திருப்பும் முயற்சியாகும். வழக்கின் ஒரே அடிப்படை, அதில் ஈடுபடுத்தப்படும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றனவா? இல்லையா? என்பதுதான்.

அதற்கான விளக்கத்தை தமிழக அரசும், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நடத்திவரும் பல்வேறு கிராம அமைப்புகளின் ஒன்றிணைப்பு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தெளிவாக விளக்கப்பட்டுவிட்டது. ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகள் பயிற்றுவிக்கப்பட்டவை, அதற்காகவே வளர்க்கப்பட்டவை என்று விளக்கப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில்தான், சர்க்கஸில் பயன்படுத்தப்படும் விலங்குகளைப் போல இவையும் பயிற்றுவிக்கப்பட்ட விலங்குகள் (Performing Animals) என்று விலங்குகள் நலச் சட்டத்தில் உள்ள பிரிவின்படி ஒப்புக்கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில்தான் ஜல்லிக்கட்டு நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதனை கிராம மக்கள் நடத்த முடியாதபடி செய்ய நிபந்தனையும் விதிக்கப்பட்டது!

இப்போது மனிதர்கள் உயிரிழக்கிறார்கள், காயப்படுகிறார்கள், காளைகளின் கண்களில் மிளகாய் பொடி தூவி இறக்குகிறார்கள் என்று எப்படியாவது ஜல்லிக்கட்டு தடை விதித்தே அழித்துவிடும் நோக்கில்...

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts