background img

புதிய வரவு

நித்தியானந்தாவை சந்தித்தார் சந்தானம்

காமெடி நடிகர் சந்தானம், சர்ச்சைக்குரிய சாமியாரான நித்தியானந்தாவை நேரில் சந்தித்து பேசினார். நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாதன் மூலம் சர்ச்சைக்குரிய சாமியார்களின் பட்டியலில் இணைந்தவர் நித்தியானந்தா. ரஞ்சிதா தனது பக்தை என்று கூறி வரும் நித்தி, அவர் மீதான புகார்களை மறுத்து வருகிறார். பெரும் தொகை கேட்டு அரசியல்வாதிகள் சிலர் தன்னை மிரட்டியதாகவும், அதற்கு அடிபணியாததால்தான் அதுபோன்ற போலீ வீடியோ ஒன்றை வெளியிட்டு என்னையும், என் பக்தர்களையும், ஆசிர‌மத்தையும் களங்கப்படுத்தி விட்டனர் என்றும் பேட்டியில் கூறியிருந்தார்.

இதற்கிடையில் நித்தியானந்தாவை தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அவ்வ‌ப்போது சந்தித்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக நித்தியானந்தாவை சந்தித்து ஆசி பெற்றிருப்பவர் காமெடி நடிகர் சந்தானம். தமிழ் சினிமா காமெடியர்களில் வேகமாக வளர்ந்து வரும் காமெடி நடிகர் சந்தானம், பெங்களூருவில் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார். முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தின் சூட்டிங் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக ‌அங்கு சென்றிருந்த சந்தானம், சாமியார் நித்தியானந்தாவை நேரில் சந்திக்க விரும்பினார். இதையடுத்து ஆசிரமத்திற்கு சென்று சந்தித்து பேசியிருக்கிறார். சந்தானத்துடன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்டும் சென்றிருந்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts