background img

புதிய வரவு

மோசமான பேட்டிங்கால் தோல்வி அடைந்தோம்: அயர்லாந்து கேப்டன் வேதனை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் வங்காளதேச அணி 27 ரன்னில் அயர்லாந்தை தோற்கடித்தது. முதலில் விளையாடிய வங்காளதேசம் 49.2 ஓவரில் 205 ரன்னில் சுருண்டது. தமிம் இக்பால் 44 ரன்னும், ரசிபுல் ஹசன் 38 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய அயர்லாந்து 45 ஓவரில் 178 ரன்னில் சுருண்டது. நீல் ஒபிரையன் அதிகபட்சமாக 38 ரன் எடுத்தார். வங்காளதேச பவுலர் சைபுல் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட் கைப்பற்றினார். வெற்றி குறித்து வங்காள தேச கேப்டன் சகிப்-அல்- ஹசன் கூறியதாது:-

வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. எஙகளது பந்துவீச்சும், பீல்டிங்கும் வெற்றிக்கு காரணமாக இருந்தது. சைபுல் இஸ்லாம் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவு இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து அயர்லாந்து கேப்டன் வில்லியம் போர்ட்டர்பீல்டு கூறியதாவது:-

எங்களது பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி 205 ரன்னுக்குள் வங்காள தேசத்தை கட்டுப்படுத்தினார்கள். ஆனால் பேட்ஸ் மேன்கள் சரியாக விளையாட வில்லை. மோசமான பேட்டிங்கால் தோல்வி அடைந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts