background img

புதிய வரவு

எல்ஐசி தேர்வு வினாத்தாள் டெல்லியில் வெளியானது: முக்கிய குற்றவாளி கைது

டெல்லி: எல்ஐசி நிறுவனத்தின் துணை நிர்வாக அதிகாரி பதவிக்கான அனைத்து இந்திய தேர்விற்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே டெல்லியில் வெளியாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியாகி அனைவரின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. அப்படி ஒரு வினாத்தாள் டெல்லி போலீசின் குற்றப்பிரிவுக்கு கிடைத்தது. அப்போது தான் இந்த விவகாரம் வெளியே தெரிய வந்தது.

இது குறித்து குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் அஷோக் சந்த் கூறியதாவது,

வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியாகிவிட்டது. எங்களுக்கும் சில வினாத்தாள்கள் கிடைத்தன. அதை நடக்கவிருக்கும் தேர்வு வினாத்தாளுடன் ஒப்பிடுகையில் இரண்டும் ஒத்திருந்தன என்றார்.

இந்த விவகாரத்தில் பவன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தான் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts