background img

புதிய வரவு

தனுஷ் ஆசைப்பட்டதை கைப்பற்றினார் சிம்பு!

சிம்பு ஆசைப்பட்டதை தனுஷ் கைப்பற்றிய காலம் போய் இப்போது தனுஷ் ஆசைப்பட்ட ஒன்றை சிம்பு கைப்பற்றியிருக்கிறார். ஆம்! உத்தமபுத்திரன் படம் தொடர்பான பத்திகையாளர் சந்திப்பில் ‌பேசிய நடிகர் தனுஷ், மீண்டும் அந்த படத்தின் தயாரிப்பாளர்களான மோகன் அப்பாராவ், டி.ரமேஷ் ஆகியோரது தயாரிப்பில் மீண்டும் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார் சொன்ன தேதிக்கு முன்பே சம்பள செட்டில்மெண்ட், சூட்டிங்கிற்காக குக்கிராமத்துக்கு சென்றாலும் அங்கேயே அத்தனை வசதிகளையும் செய்து கொடுப்பது என பல விஷயங்களையும் செய்து கொடுத்ததாலோ என்னவோ, தனுஷ் அப்படியொரு ஸ்டேட்மெண்ட் கொடுத்தார்.

ஆனால் அந்த இரட்டை தயாரிப்பாளர்கள் தாங்கள் இயக்கும் புதிய படத்திற்கு சிம்புவை அணுகி தனுஷூக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். ஏனாம்? பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன சல்மான் கானின் தபாங் படத்தைதான் அந்த தயாரிப்பாளர்கள் ரீ-மேக் செய்யவிருக்கிறார்கள். அதிரடி ஆக்ஷன் படமான தபாங்கில், நாயகனுக்கு போலீஸ் வேடம். தனுஷின் திடகாத்திரமான உடம்புக்கு போலீஸ் வேடமெல்லாம் ஒத்துவராது என்பதால்தான் தனுஷை அணுகாமல், சிம்புவை அணுகியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். சிம்புவும் கதை படித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டு, கால்ஷீட் எப்ப வேணும் என்று கேட்டிருக்கிறாராம். தனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு சிம்புக்கு போனதில் தனுஷூக்கு வருத்தம் எதுவும் இல்லையாம்.

இருக்காதா பின்னே.... விட்டுக் கொடுப்பதுதானே நட்புக்கு அழகு!

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts