background img

புதிய வரவு

கேரளாவில் குண்டு வெடித்து 5 பேர் பலி: தயாரித்தபோது வெடித்தது

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ளது நடபுரம் கிராமம். இங்குள்ள ரகசிய இடம் ஒன்றில் நேற்று இரவு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 3 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.

இறந்த 5 பேரும் ரியாஷ், ஷமீர், ஷபீர், ரபீக், ஷபீல் என்று அடையாளம் தெரிந்தது. 5 பேருமே அருகருகே உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள். அவர்கள் வெடிகுண்டு தயாரித்தபோது குண்டு வெடித்து உள்ளது. ஏன் அவர்கள் குண்டு தயாரித்தார்கள்? எங்கேனும் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் குண்டு தயாரித்தார்களா? என்று தெரியவில்லை.

இந்த பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தொண்டர்கள் அடிக்கடி மோதிக்கொள்வது உண்டு. அப்போது வெடிகுண்டு தாக்குதல்களும் இடம் பெறும். எனவே இப்போது குண்டுகளை தயாரித்தவர்களும் இதற்காகவே தயாரித்து இருக்கலாம் என கருதப்படு கிறது. இவர்களுடன் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? ஏதேனும் முக்கிய சதித்திட்டம் தீட்டி இருக்கிறார்களா? எனவும் விசாரணை நடந்து வருகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts