background img

புதிய வரவு

பாசி பருப்பு மாவு உருண்டை

தேவையானவை:

பயத்தம் பருப்பு - 1 கப்
சர்க்கரை - ஒன்றேகால் கப்
நெய் - 1 கப்

செய்முறை:

பயத்தம் பருப்பை நன்றாக சுத்தம் செய்து வாணலியில் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் பருப்பை நன்றாக ஆறவைத்து மிருதுவாக அரைத்து சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.

இதேபோல, சர்க்கரையும் நைசாக அரைத்து சலித்துக் கொள்ளவும்.

அதன்பின்னர், சலித்த மாவுடன் சலித்த சர்க்கரையையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

நெய்யை நன்கு சூடு பண்ணவும். ஆனால் நெய் முறிந்துவிடக்கூடாது. நெய்யை மாவில் ஊற்றினால் மாவு நுரையாக வரவேண்டும். அதுதான் சரியான பதம்.

சுட வைத்த நெய்யை மாவில் ஊற்றி நன்றாகக் கிளறி, அதே சூட்டுடன் உருண்டைகளாகப் பிடிக்கவும்.

நெய் கலந்த மாவு ஆறிவிட்டால் உருண்டைகளாகப் பிடிக்க வராது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts