background img

புதிய வரவு

நடுநிசி நாய்கள் படத்தில் ஆபாசம்: கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் போராட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

கவுதம்மேனன் இயக்கிய நடுநிசி நாய்கள் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. சைக்கோ இளைஞனின் தொடர் கொலைகளை இப்படத்தில் காட்சி படுத்தியுள்ளார். இதில் ஆபாசம் தூக்கலாக இருப்பதாக இந்து மக்கள் கட்சி கண்டித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நடுநிசி நாய்கள் படத்தில் நிறைய சீன்கள் வக்கிரமாக உள்ளன. வளர்ப்பு தாயை கூட தாய் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதுதான் நமது பண்பாடு. ஆனால் கவுதம்மேனன் அந்த உறவை விரசமாக்கி விஷம் கலந்துள்ளார்.

எங்கேயாவது இது போன்று தவறு நடக்கலாம். அதை திரையில் வெளிச்சம் போட்டு காட்டக் கூடாது. அப்படி செய்தால் அது போன்ற தவறுகள் பரவ வாய்ப்பு இருக்கிறது. இயக்குனர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

தந்தையே மகனை பாலியல் தொழில் செய்வோர் கூட்டத்தில் அனுமதித்து சித்ரவதை செய்யும் சீன்கள் எவரும் சிந்திக்காதது.இது போன்ற சீன்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும். இல்லையேல் கவுதம்மேனன் வீட்டில் நாய்களுடன் திரண்டு போராட்டம் செய்வோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts