background img

புதிய வரவு

இராசா பதவி விலகல் ஏற்கபடவில்லை: தி.மு.க

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மத்திய புலனாய்வுக் கழகத்தால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, பிரச்சார செயலர் பதவியில் இருந்த விலக முன்வந்ததை தி.மு.க. நிராகரித்துவிட்டது.

தி.மு.க.தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றுவரும் அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில், தி.மு.க.வின் பிரச்சார செயலர் பொறுப்பில் இருந்து ஆ.இராசா விலக முன்வந்துள்ளதை அறிவித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது விலகலை கட்சியின் பொதுக் குழு ஏற்கவில்லை என்று கூறியுள்ளார்.

“கைது செய்யப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளியாகிவிட மாட்டார்” என்பதால் அவருடைய விலகல் ஏற்கப்படவில்லை என்று பொதுக் குழு நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts