''2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்பு இருக்கிறது'' என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது என்றார்.
பட்ஜெட் கூட்டத்தொடரை எந்தவித அமளிக்கும் இடம் இன்றி நடத்த விரும்புகிறோம் என்று கூறிய பிரணாப், எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்பு இருக்கிறது என்றார்.
எனவே எதிர்க்கட்சிகள், பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்றும் வரும் 8ஆம் தேதி நடக்க இருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளின் கருத்துக்களும் பரிசீலிக்கப்படும் என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment