background img

புதிய வரவு

ராசா கைதால் திமுகவுடனான உறவு பாதிக்காது: காங்கிரஸ்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டது திமுகவுடனான உறவை பாதிக்காது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலர் ஜனார்தன் திவிவேதி, இப்போது நடந்துள்ளது சட்டம் அதன் கடமையைச் செய்துள்ள ஒரு நிகழ்வு என்றார்.

இதுபோன்று அனைத்து வழக்குகளும் புலனாய்வு செய்யப்பட்டு, முறையாக விசாரிக்கப்படும் என்று காங்கிரஸ் முன்னரே கூறியிருந்ததாகவும் திவிவேதி தெரிவித்தார்.

மேலும் 2ஜி வழக்கில் ராசா கைது செய்யப்பட்டதன் மூலம், கர்நாடாகவில் எடியூரப்பாவுக்கு எதிராகவும் பா.ஜனதா நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts