background img

புதிய வரவு

203 ரன்களுக்குச் சுருண்டது மேற்கிந்திய அணி

கொழும்புவில் நடைபெறும் இலங்கை, மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலன 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய அணி முதலில் பேட் செய்து 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


துவக்கத்தில் கிறிஸ் கெய்ல் அதிரடியாக ஆடி 4 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 30 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து முரளிதரன் பந்தில் ஆட்டமிழந்தார்.


டேரன் பிராவோ 39 ரன்களையும், இவரது சகோதரர் டிவைன் பிராவோ 39 ரன்களையும் எடுத்தனர். முதல் போட்டியில் அபார சதம் கண்ட பரது 12 ரன்களில் குலசேகராவிடம் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். விக்கெட் கீப்பர் கால்டன் பாஹ் 28 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.


இலங்கை தரப்பில் மலிங்கா 10 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் குலசேகரா, முரளிதரன் தலா 2 விக்கெட்டுகளையும் ஹெராத் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts