background img

புதிய வரவு

அழகான நடிகையை தேடுகிறார் கவு‌தம் மேனன்!

சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை மீண்டும் தூசி தட்டி கையில் எடுத்திருக்கும் டைரக்டர் கவுதம்மேனன், அந்த படத்தில் நடிப்பதற்கு அழகான முகவெட்டுள்ள நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார். மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகி, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியவர் டைரக்டர் கவுதம் மேனன். அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் கவுதம், கடந்த ஆண்டு சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற படத்தை இயக்க திட்டமிட்டு, நாயகியாக நடிக்க அசினிடம் கால்ஷீட் கேட்டார். அம்மணியோ, நான் இந்தியில ரொம்ப பிஸியாக்கும் என்று சொல்ல கவுதம் மேனனின் வாய்ப்பை மறுத்தார். இதையடுத்து த்ரிஷாவை ஒப்பந்தம் செய்த கவுதம், அவரை வைத்து போட்‌டோ செஷன் நடத்தி, சில காட்சிகளையும் படமாக்கினார்.


என்ன ஆனதோ தெரியவில்லை.. எடுத்தது எடுத்தபடியே கிடந்தது. ஏதோவொரு வறட்சி காரணமாக வளராமல் கிடந்த சென்னையில் ஒரு மழைக்காலத்தை இப்போது மீண்டும் தூசி தட்டி கையில் எடுத்திருக்கிறார் கவுதம்‌ மேனன். தமிழில் நல்ல கதைகள் கிடைத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன்; என்னை வளர வைத்ததே தமிழ் சினிமாதான் என்ற அசினின் டயலாக் பேட்டியை பார்த்த கவுதம், தனது படத்தில் நடிக்க வரும்படி அசினுக்கு தூது விட்டிருக்கிறார். அம்மணியோ..., இப்போதான் பாலிவுட்ல ஒரு படத்தில் கமிட் ஆயிருக்கேன். சாரி... என்னால வர முடியாது, என்று தட்டிக் கழித்து விட்டாராம். இதனால் கடுப்பான கவுதம் மேனன், நல்ல அழகான முகவெட்டுள்ள நடிகையை தேடத் தொடங்கி விட்டார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts