background img

புதிய வரவு

அஜீத்தின் பில்லா-2-வை இயக்குகிறார் சக்ரி டோலட்டி

அஜீத்தின் பில்லா-2வில் டைரக்டர் விஷ்ணுவர்தன் விலகியதையடுத்து, டைரக்டர் பொறுப்பை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி எடுத்துள்ளார். அ‌தேபோல் பில்லா படத்தில் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா பில்லா-2விலும் இசையமைக்கிறார்.

கடந்த 2007ம் ஆண்டு அஜீத்-நயன்தாரா-நமீதா நடிப்பில் டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், யுவனின் இசையில் மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பில்லா-2 எனும் பெயரில் எடுக்க இருக்கின்றனர். டேவிட் எப்படி பில்லாவாக மாறினானர் என்பதே படத்தின் கதை.பில்லாவை இயக்கிய விஷ்ணுவ‌ர்தனே பில்லா-2வை இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென விஷ்ணுவர்தன் இப்படத்திலிருந்து விலகினார். இதனையடுத்து யார் இந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், கமல் நடித்து சூப்பர் ஹிட்டான உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி பில்லா-2 படத்தை இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.என்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சுரேஷ் பாலாஜி-ஜார்ஜ் பயஸின் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஆகிய இருவரும் இணைந்து பில்லா-2வை தயாரிக்கின்றனர். தீனா, பில்லா, ஏகன், மங்கத்தா படத்தை தொடர்ந்து பில்லா-2விற்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கிறார். படத்திற்கான நாயகி மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

நாளை பிளஸ்டூ தேர்வு தொடக்கம்-28ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம்

சென்னை : தமிழகத்திலும், புதுச்சேரியிலும், பிளஸ்டூ பொதுத் தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. மார்ச் 28ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. இன்று சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கின.

இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வை 7,80,631 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களில் மாணவிகளின் எண்ணிக்கை 3,87,102 பேர் ஆகும். மாணவர்களை விட 50 ஆயிரத்து 659 மாணவிகள் அதிகம் ஆவர்.

பிளஸ்டூ தேர்வுக்காக தமிழகம் மற்றும் புதுவையில், 1890 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுவையில் மொத்தம் 11,517 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.

இவர்கள் போக தனித் தேர்வர்களின் எண்ணிக்கை 57,086 பேர் ஆவர்.

தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கும், பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும். தேர்வு தொடங்கியதும் முதல் கால் மணி நேரம் வினாத்தாளைப் படித்துப் பார்க்க அவகாசம் தரப்படும்.

உடல் ஊனமுற்றோர், பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்.

அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோரைப் பிடிக்க பறக்கும் படையினரும் தயாராக உள்ளனர். தேர்வுகளில் பிட் அடித்தல், காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவோர் பிடிபட்டால் கடும் தண்டனை தரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கால அட்டவணை:

மார்ச் 2 - தமிழ் முதல் நாள்
மார்ச் 3 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 7 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 8 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 11 - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்
மார்ச் 14 - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து
மார்ச் 17 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷியன் அன்ட் டயட்டிக்ஸ்
மார்ச் 18 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
மார்ச் 21 - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்
மார்ச் 23 - தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழி பாடம்
மார்ச் 25 - அனைத்து தொழில்பாட தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.

28ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள்

பிளஸ்டூ தேர்வு முடிவடைந்ததும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் 28ம் தேதி தொடங்குகின்றன. இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 11ம்தேதி முடிவடையும். பத்தாம் வகுப்புத் தேர்வை 7 லட்சத்து 54 ஆயிரத்து 679 பேர் எழுதுகின்றனர்.

அதேபோல மெட்ரிகுலேசன் தேர்வு, ஆங்கிலோ இந்தியன் தேர்வு, ஓ.எஸ்.எல்.சி. ஆகிய தேர்வுகள் மார்ச் 22-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 11-ந் தேதி முடிகிறது.

சிபிஎஸ்இ தேர்வுகள் தொடங்கின

இதற்கிடையே, சிபிஎஸ்இ எனப்படும் மத்திய கல்வி வாரியத்தின் பத்து மற்றும் பிளஸ்டூவுக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின.

10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 25ம் தேதியும், பிளஸ்டூவுக்கான தேர்வுகள் ஏப்ரல் 13ம் தேதியும் முடிவடையும்

நகராட்சி தலைவரின் பிரியாணி விருந்து : கொடைக்கானலில் தி.மு.க.,கொண்டாட்டம்

கொடைக்கானல் : தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், கட்சிக்காரர்களை, "குஷி'ப்படுத்த ஆளுங்கட்சியை சேர்ந்த நகராட்சி தலைவரின், திடீர், "பார்ட்டி'யால், கட்சிக்காரர்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே, கொடைக்கானலில் தி.மு.க., சார்பில் தெருமுனைப் பிரசாரம், வாக்காளர்கள், "கவனிப்பு' ஒரு புறம் நடந்தாலும், கட்சிப் பிரமுகர்களையும் கவரும் விதமாக, நேற்று கொடைக்கானல் நகராட்சி பகுதியின், குடிநீர் ஆதாரமாக விளங்கும், அடர்ந்த வனப் பகுதியிலுள்ள, "ரிசர்வாயரில்' ஆளுங்கட்சி பிரமுகர்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள், கான்ட்ரக்டர்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்ற, அசைவ விருந்து நடந்தது.
தி.மு.க.,வைச் சேர்ந்த நகராட்சி தலைவர் முகமது இப்ராகிம் ஏற்பாட்டின் பேரில், சுடச்சுட மட்டன் பிரியாணி, சிக்கன், முட்டை என அனைத்து உணவு வகைகளும் இடம் பெற்றிருந்தன. முக்கிய வி.ஐ.பி., இந்த பகுதி அடங்கிய தொகுதியில் நிற்க உள்ளதால், மாவட்ட தி.மு.க., சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக, கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இப்பவே இப்படி என்றால் தேர்தல் வந்து, அந்த முக்கிய பிரமுகர் நின்றால் நாள் முழுவதும் கொண்டாட்டம் தான் என தொண்டர்கள் குஷிப்பட்டு கொண்டனர்.

காய்கறிகள், பயறு உற்பத்தி அதிகரிக்க ரூ.2,200 கோடி

புதுடில்லி : காய்கறிகள், எண்ணெய் வித்துகள், பயறு வகைகள் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதையடுத்து, அவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பொது பட்ஜெட்டில் 2,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதாவது: கடந்த சில மாதங்களாக, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காய்கறிகள், எண்ணெய் வித்துகள், பயறு வகைகள், தினை மற்றும் கால்நடைகளுக்கான தீவனம் ஆகியவற்றின் விலை அதிகரித்தது, அரசுக்கு கவலை அளித்தது. மொத்த விலை குறியீட்டு எண்ணில், பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி ஆகியவற்றின் பங்கு 70 சதவீதம். எனவே, இவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
இவற்றின் விலையை கட்டுப்படுத்தும் வகையிலும், இந்த பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், இந்த பட்ஜெட்டில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 2,200 கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாநிலங்களில் பசுமை புரட்சிக்கு வித்திடும் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடர்ந்து செயல்படும். இதற்காக, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பயறு வகைகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டத்துக்கும் 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் வினியோகம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் இடையில், பெரும் பிரச்னை நிலவுகிறது. இந்த பிரச்னையை போக்குவதற்கு, இந்த ஆண்டில் கவனம் செலுத்தப்படும். உணவு பணவீக்கத்தின் அளவு, தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் தான் உள்ளது. ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்துக்கான ஒதுக்கீடு, ஏற்கனவே இருந்த 6,755 கோடி ரூபாயில் இருந்து, தற்போது 7,860 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பயறு உள்ளிட்ட தானிய வகைகளின் உற்பத்தி, இந்த நிதியாண்டில் 20 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இருந்தாலும், இத்துறையின் தன்னிறவை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த இலக்கு எட்டப்படும். சமையல் எண்ணெய் இறக்குமதி செய்வதால், அதிக செலவு ஏற்படுகிறது. எனவே, எண்ணெய் வித்துக்களை பயிரிடுவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். இதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தரமான காய்கறிகளை, குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக, 300 கோடி ரூபாய் செலவில் காய்கறி சந்தை அமைக்கப்படும். முக்கியமான இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் பட்ஜெட்

பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு ஆகியவற்றை பலப்படுத்தும் நோக்கிலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விவசாய உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. மத்திய அரசின் 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தார். அதன்படி இந்தாண்டு பொருளாதார வளர்ச்சி என்பது 8.6 சதவீதமாக இருக்கும். வரும் 2012-13ம் ஆண்டில் இந்த வளர்ச்சியை 9 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீராகவும், உறுதியாகவும் அதிகரிக்க செய்யும் நோக்கத்திலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாகவும் பல்வேறு நடவடிக்கைகள் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளன. தவிர விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு முக்கிய நடவடிக்கையாக, விவசாய உற்பத்திக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலையேற்றம் கவலையளிப்பதாக உள்ளது. உணவுப் பொருட்களின் வினியோகத்திற்கும், அதன் விற்பனைக்கும் இடையில் தான் மிகப்பெரும் குறைபாடுகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மொத்த விற்பனைக்கான விலைகள் எதுவுமே சில்லறை விற்பனையில் பிரதிபலிக்காமல் உள்ளது. இதனால், உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கும் பயனில்லை; நுகர்வோரான பொதுமக்களுக்கும் பயனில்லை. ஆகவே, இந்த சிக்கலை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
வருமான வரி விலக்கு உச்சவரம்பு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக உயரும். இத்துடன் தனி நபருக்கு, வருடத்திற்கு 2,000 ரூபாய் கிடைக்கும் வகையில் சலுகைகள் தரப்பட்டிருக்கின்றன. இதனால், அரசுக்கு 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். "சுகம்' என்ற பெயரில் எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி செலுத்தும் படிவம் இந்தாண்டு அறிமுகமாகும்.
கலால் வரி: கடந்தாண்டு ஊக்குவிப்பு நிதியாக 370 பொருட்களுக்கு கலால் வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதில் 130 பொருட்களுக்கான வரிவிலக்கு ரத்து செய்யப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் வந்த பிறகு இது அமலுக்கு வரும். வரி சீர்திருத்தம் செய்யும் வகையில் இரண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நேரடி வரி குறியீடு என்பது 2012ம் ஆண்டு முதல் அமல் ஆகும். சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் குறித்து, மாநில அரசுகளுடன் இருந்த சில சிக்கல்கள் களையப்பட்டுவிட்டதால், வரைவு மசோதா குறித்து இந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்தப்படும்.
பங்குகள் விற்பனை வாயிலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்டப்படும். உள்கட்டமைப்புக்கு 2 லட்சத்து 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். கங்கை நதி தவிர நாட்டின் பிற நதிகளை சுத்தம் செய்வதற்கு 200 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படும்.
அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளம் 3,000 ரூபாயாகவும், அங்கன்வாடி உதவியாளர்களின் சம்பளம் 1,500 ரூபாயாகவும் உயரும். விலைவாசி உயர்வுக்கு ஏற்பட ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியும் உயர்த்தி வழங்கப்படும். 2,000 பேர் வசிக்கும் 73 ஆயிரம் கிராமங்களில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் துவங்கப்படும்.
விவசாயிகளுக்கு கடந்தாண்டு 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டது. இந்தாண்டு 4 சதவீத வட்டியில் 4 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும். தற்போது 20 லட்ச ரூபாய் வரையில் வழங்கப்படும் வீட்டுக் கடன், இனி 25 லட்ச ரூபாய் வரையில் வழங்கப்படும்.
கிராமப்புற சுகாதார திட்டங்களுக்கு 26 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படும். இது கடந்தாண்டை காட்டிலும் 20 சதவீதம் கூடுதல் ஆகும். கல்வி திட்டங்களுக்கு 52 ஆயிரத்து 57 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படும். இது கடந்தாண்டை காட்டிலும் 24 சதவீதம் கூடுதல் ஆகும்.
பெண்கள் சுயஉதவிக் குழுக்களை மேம்படுத்துவதற்கு 500 கோடி ரூபாய் செலவில் தனி திட்டமும், சிறு தொழில் முனைவோர்கள் மேம்பாட்டிற்கு என 5,000 கோடி ரூபாய் செலவில் தனி திட்டமும் செயல்படுத்தப்படும். 80 வயதை தாண்டிய முதியோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 800 ரூபாயாக உயர்த்தப்படுமென்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேருக்கு தூக்கு : 20 பேருக்கு ஆயுள்: சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பு

ஆமதாபாத்: குஜராத்தில் ரயில் எரிப்பு வழக்கில் கரசேவகர்கள் 59 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து குஜராத் சிறப்பு கோர்ட் அதரடியான தீர்ப்பை வெளியிட்டது.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதியன்று உ.பி. மாநிலம் அயோத்தியா சென்று சபர்மிதி எக்ஸ்பிரஸ் மூலம் ஏராளமான சாதுக்கள் திரும்பிக்கொண்டிருந்தனர். குஜராத் கோத்ரா ரயில் நிலையத்தில் வன்முறை கும்பல் ஒன்று ரயிலுக்கு தீ வைத்து எரித்தது. இதில் 59 கரசவேகர்கள் கொல்லப்பட்டடனர். இதனை தொடர்ந்து மாநிலத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் ஐ.எஸ்.ஐ., அமைப்பு தலைமறைவில் இந்த சதி திட்டம் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு அதன் தலைவர் மாஜி சி.பி.ஐ. இயக்குனர் ராகவன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணை ஆமதாபாத் சிறப்பு கோர்ட்டில் நடந்தது.

இந்த வழக்கில் மொத்தம் 134 பேர் சேர்க்கப்பட்டனர். 80 பேர் சிறையில் உள்ளனர். 15 பேர் ஜாமீனில் உள்ளனர். 13 பேர் ஆதாரமின்மையால் விடுவவிக்கப்பபட்டனர். 16 பேர் தலைமறைவாக உள்ளனர்.

நம்பத்தகுந்த ஆதாரம்: இன்று 95 பேர் மீதான குற்றம் தொடர்பாக 31 பேர் குற்றவாளிகள் என சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ரயிலை எரித்து 59 பேரை கொன்ற சதித்திட்டம் உண்மைதான் என கோர்ட் ஏற்றுக்கொண்டது. இதற்கான ஆதாரங்களை நம்பத்தகுந்ததாக இருந்ததாக கோர்ட் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது . குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று ( செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதன்படி 11 பேருக்கு தூக்குத்தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

நைட் கிளப் பாரில் ஜெனிலியா டான்ஸ்... பெண்கள் அமைப்புக்கு நிதி திரட்டுகிறார்!

வேலாயுதம், உருமி, தெலுங்கு-இந்திப் படங்கள் என பிஸியாக இருந்தாலும், நேரம் கிடைக்கும்போது தன்னால் முடிந்த சேவையையும் செய்கிறாராம் ஜெனிலியா.

தற்போது நைட் கிளப் பார் ஒன்றில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அபலை பெண்களுக்காக நிதி திரட்ட முடிவு செய்துள்ளாராம் ஜெனிலியா.

இதுகுறித்து ஜெனிலியா கூறுகையில், "ஆதரவற்ற பெண்களுக்கும், கஷ்டப்படுகிற பெண்களுக்கும் உதவி செய்கிற அமைப்பு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக நைட் கிளப்பில் ஒரு நாள் முழுவதும் இருக்க முடிவு செய்துள்ளேன். அங்கு வருபவர்களை வரவேற்பேன், கலந்துரையாடவும் செய்வேன். இது போன்ற சமூக சேவை பணிகளில் எனக்கு ஈடுபாடு உண்டு.

கொடுமைகள், கஷ்டங்களை எதிர்த்து போராடும் பலம் பெண்களிடம் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு கல்வி அறிவு கொடுத்தால் அந்த பெண்ணின் குடும்பமே நன்றாக இருக்கும், அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். அதனால்தான் என்னால் முடிந்த இந்த உதவியைச் செய்கிறேன்", என்றார்.

சைவ சமையல் - உபயோகக் குறிப்புகள்

சமையலில் காரம் அதிகமாக இருந்தால் எலுமிச்சைப் பழச்சாறு சேர்க்கவும். குழம்பில் உப்பு அதிகமாக இருந்தால் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும்.

ரொட்டியை போட்டு வைக்கும் டப்பாவில் நான்கு மிளகைப் போட்டு வைத்தால் ரொட்டி நமத்துப் போகாமல் இருக்கும்.

காய்களை வதக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் காய்கள் சீக்கிரம் வெந்துவிடும்.

நெய்யை உருக்கிய பின்னர்தான் சாப்பிட வேண்டும். கெட்டி நெய்யாக சாப்பிட்டால் ஜீரணமாவது கடினமாக இருக்கும்.

கேசரி செய்யும் போதும் தண்ணீரின் அளவைக் குறைத்து பால் சேர்த்துக் கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

கீரையை வேகவைக்கும் போது மூடி போட்டு வைக்கக்கூடாது. அவ்வாறு மூடி வேகவைத்தால் நிறமும் மணமும் மாறிவிடும்.

முளைக்கீரையை வேகவைக்கும் போது சிறிது சர்க்கரை சேர்த்துக்கொண்டால் ருசியாக இருக்கும்.

பச்சரியில் கல் உப்பை சேர்த்து கலந்து வைத்தால் பூச்சி வராது.

காய்கறிகளை துணிப்பைகளில் போட்டு வைத்தால் அதனுடைய நீர் சத்து குறைந்துவிடும்.

பூரி செய்ய தயாரிக்கும் மாவை உடனே பயன்படுத்திவிட வேண்டும். அதிக நேரம் கழித்து பூரி சுட்டால் அதிகமான எண்ணெயைக் குடிக்கும்.

வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு குழம்பை இறக்கும்முன் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

சேமியாக, ஜவ்வரிசி பாயாசம் செய்த பின்னர் அதில் ஒரு டம்ளம் வெந்நீர் ஊற்றி வைத்தால் பாயாசம் கெட்டியாகாமல் இருக்கும்.

பஜ்ஜிக்கு மாவு கரைக்கும் கடலை மாவுடன், அரிசி மாவிற்கு பதில் இட்லி மாவு சேர்த்து கரைத்து பஜ்ஜி சுடலாம். சோடா மாவு சேர்க்காமலே பஜ்ஜி மிருதுவாக இருக்கும்.

கிழங்குகளை மூடி பாத்திலத்தில் வேகவைக்க வேண்டும். காய்கறிகளை திறந்த பாத்திரத்தில் வேகவைக்க வேண்டும்.

சப்பாத்தி, பூரி செய்வதற்கு கோதுமையை அரைக்கும் போது ஒரு கிலோவிற்கு கால் கிலோ வீதம் கொண்டைக்காலையோ அல்லது சோயாவோ சேர்த்து அரைத்தால் மேலும் சத்தான மாவு கிடைக்கும்.

அசைவ சமையல் - குறிப்புகள்

முட்டைகளை தண்ணீர்ல் வைத்தால் நல்ல முட்டை பாத்திரத்தின் அடியில் இருக்கும். கெட்டுப்போன முட்டையின் குறுகிய முனை பாத்திரத்தின் அடியைத் தொட்டுக் கொண்டு இருக்கும்.

ஈரமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கலக்கினால் வெள்ளைக்கரு பாத்திரத்தில் ஒட்டி வீணாவதைத் தவிர்க்கலாம்.

சில முட்டையை உடைத்து ஊற்றும்போது மஞ்சள், வெள்ளைக் கருவுடன் சிவப்பு நிறத்தில் இரத்தம் போன்று கலந்து இருக்கும். அப்படியிருந்தால் உபயோகிக்கக்கூடாது.

முட்டை தயார் செய்த பாத்திரங்களை குளிர்ந்த தண்ணீரில் ஊறப்போட்டு உடனே கழுவ வேண்டும்.

மஞ்சள் நிறம் கொண்ட எண்ணெய் மயமான கொழுப்புடையதும், உளம் ஊதா நிறம் கொண்ட மாமிசத்தையும் வாங்கக் கூடாது.

ஆற்று மீனின் சேற்று வாடை போவதற்கு மீனை உப்புப் போட்ட தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

உலர்த்திய மீனை சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி சில மணி நேரம் குளிர்ந்த தண்ணீரில் ஊற வைக்கவும்.

மீனை கனமான துண்டுகளாக வெட்டி மிளகு, எலுமிச்ச பழச்சாறு, உப்பு சேர்த்து சுத்தமான காகிதத்தில் டால்டா தடவி அதில் மீனைச் சுற்றி இட்லிப்பானை ஆவியில் வேகவைத்து வெந்ததும் சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

ஆட்டிறைச்சி புதியதாக இருந்தால் உறைந்த பாலாடை போன்ற கொழுப்போடும், இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். உடைந்த எலும்பின் உட்பாகம் வெண்மையாக இருக்கும்.

கடினமான சமைக்காத கறியை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து ஊறவைத்தால் மிருதுவாகிவிடும்.

அசைவ சாப்பாடு சாப்பிட்ட பிறகு எலுமிச்சம் பழச்சாறு குடித்தால் எளிதில் ஜீரணமாகும்.

2 போட்டிகளிலும் வாய்ப்பு நழுவியது: ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை

ஏற்கனவே 2 ஆஸ்கார் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த தடவை 2 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தார். “127 ஹவர்ஸ்” என்ற படத்துக்கு இசை அமைத்ததற்காக சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் இசை ஆகிய 2 பிரிவுகளில் அவரை விருதுக்கு பரிந்துரை செய்து இருந்தனர். ஆனால் இந்த இரு பிரிவுகளிலுமே அவருக்கு விருது கிடைக்கவில்லை.

சிறந்த பின்னணி இசை பிரிவில் “தி சோசியல் நெட்வொர்க்” படத்துக்கு இசை அமைத்த டிரன்ட் ரேஸ்னர், ஆட்டிகஸ்ரோஸ் ஆகியோர் ஆஸ்கார் விருதை தட்டி சென்றனர். சிறந்த பாடல் இசை பிரிவில், “டாய் ஸ்டோரி-3” என்ற படத்தில் “வி பிலாங் கு கெதர்” என்ற பாடலுக்கு இசை அமைத்த ரேன்டி நியூமென் விருதை பெற்றார். எ.ஆர்.ரகுமானுக்கு இந்த தடவையும் விருது கிடைக்கும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் விருது கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

“தி பைட்டர்” படத்தில் நடித்த கிறிஸ்டியன் பாலேவுக்கு சிறந்த துணை நடிகர் விருதும் அதே படத்தில் நடத்த மெலிசாவுக்கு லியோ சிறந்த துணை நடிகைக்கான விருதும் கிடைத்தது. சிறந்த வெளிநாட்டு மொழி படத்துக்கான விருதை டென்மார்க் நாட்டை சேர்ந்த “இன் ஏ பெட்டர் வோர்ல்டு” படம் பெற்றது.

ஆயுட்காலத்தில் 11 ஆண்டுகளை டி.வி. முன்பு கழிக்கும் இங்கிலாந்து ஆண்கள்: 10,500 மணி நேரம் மது குடிக்கின்றனர்

இங்கிலாந்து மக்களின் வாழ்க்கை நடைமுறை குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களது உடல் அளவு பழக்கவழக்கங்கள் போன்ற ருசிகர சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.

சராசரியாக அவர்கள் 5 ஆடி 10 அங்குல உயரமும், 175 பவுண்டு எடை உடையவராகவும் உள்ளனர். ஆண்டுக்கு ரூ.19 லட்சத்து 75 ஆயிரம் சம்பாதிக்கின்றனர்.

உடை அலங்காரத்துக்கு ரூ.40 ஆயிரமும், பீடி குடிக்க ரூ.80 ஆயிரமும் செலவு செய்கின்றனர். ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வதில் இவர்களுக்கு அலாதி பிரியம் உண்டு. இதற்காக ரூ.1லட்சத்து 55 ஆயிரம் செலவழிக்கின்றனர். உணவு சாப்பிட ரூ.30 ஆயிரமும் செலவிடுகின்றனர்.

தற்போதை நவின காலத்து இளைஞர்கள் குற்ற உணவு மிக்கவர்களாக திகழ்கின்றனர். தங்களது வாழ்நாளில் சுமார் 19 லட்சம் தடவையாவது “சாரி” (வருத்தம்) தெரிவிக்கின்றனர். இங்கிலாந்து மக்கள் உறவினர்களுடன் சேர்ந்து தங்களுக்கு தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்வதை பெரிதும் விரும்புகின்றனர். இதில் பெண்களைவிட ஆண்களே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

இங்கிலாந்தை சேர்ந்த ஆண்கள் டி.வி. நிகழ்ச்சிகளில் மூழ்கி கிடக்கின்றனர். தங்களது ஆயுட்காலத்தில் 11 ஆண்டுகளை டி.வி. முன்பே கழிக்கின்றனர். மேலும் 10,500 மணி நேரம் மது குடித்தே பொழுது போக்குகின்றனர். “செக்ஸ்”சில் ஆர்வம் மிக்கவர்களாக ஆண்கள் திகழ்கின்றனர்.

தங்களது வாழ்நாளில் குறைந்தது 9 பெண்களுடன் இரவு பொழுதை கழிக்கின்றனர். இந்த தகவல் அந்நாட்டில் இருந்து வெளிவரும் “டெய்லி மெயில்” பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: ஜிம்பாப்வே அணி 175 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நாக்பூரில் நடந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே-கனடா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தைபு 9 பவுண்டரிகளுடன் 98 ரன்களும், எர்வின் 81 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 85 ரன்களும் எடுத்தனர்.

பந்து வீச்சில் பாலாஜி ராவ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கனடா அணி 42.1 ஓவர்களில் 123 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து 175 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.

கனடா அணியில் அதிகபட்சமாக சுர்காரி 26 ரன்களும், குனசேகரா 24 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் பிரைசர், கிரீமர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

திருச்செந்தூர் முருகன் கோவில்

கோவில் வரலாறு:::

திருச்செந்தூர் முருகன் கோவில் இசை முழங்கும் கடலோரம் அமைந்துள்ளது. சூரிய உதயம் முருகனின் கண் முன்பே நடைபெறுகிறது. அலைகள் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை ஓதியபடி அழகன் திருவடிகளை பணிந்து செல்கிறது. உலகத்தை ஆளும் மும்மூர்த்தியாக சுப்பிரமணிய சுவாமி அருள் பாலிக்கிறார்.

இந்த கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு உந்து சக்தியாக பஞ்சலிங்கங்களும் வெங்கடேச பெருமாளும் உள்ளனர். பெருமாள் சன்னதியில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் வயிற்றின் தொப்புள் கொடியில் அமர்ந்து பிரம்மா அருள் பாலிக்கிறார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தூத்துக்குடியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. குறிஞ்சிக் (மலை) கடவுள் முருகன்.

இங்கு கடற்கரையில் சந்தான மலையில் அமர்ந்துள்ளார். "செந்தில் மாமலையுறும் செங்கல்வராயன்'' என்று கந்தசஷ்டி கவசத்தில் தேவராய சுவாமிகள் குறிப்பிடுகிறார். வடமொழியில் இதை கந்தமாதன பர்வதம் என்பர். திருமுருகாற்றுப் படையில் இவ்வூர் திருச்சீரலைவாய் எனக் கூறப்படுகிறது. செந்தில் என்ற பெயரும் உண்டு.

செந்து என்றால் உயிர். இல்-அடைக்கலமான இடம். உயிர்களுக்கு அடைக்கலமான இடமான செந்தில், என்ற பெயர் மருவி செந்தூர் என்றாயிற்று. வடமொழியில் ஜெயந்திபுரம் என்று கூறுவர். சேந்து (முருகன்)+இல் என்றும் கூறலாம். சூரனை வென்ற பின்னரே திருப்பரங்குன்றத்தில் தெய்வானை திருமணம் நடைபெற்றது.

எனவே திருச்செந்தூரே முதற்படை வீடு என்று கூறுவாரும் உண்டு. ஆனால் நக்கீரர் திருப்பரங்குன்றத்தை முதலிலும், திருச்செந்தூரை இரண்டாவதும் குறிப்பிடுகிறார். கடைச்சங்க காலப்புலவர்கள் இவ்வூரைக் குறித்திருப்பதால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வூர் சிறப்புற்று விளங்கியதை அறிய முடிகிறது.

அகநானூரில் பரணர் என்னும் புலவர் அலைவாயின் சிறப்பைப் பாடியுள்ளார். புறநானூற்றில் மதுரை மருதன் இளநாகனார்மானும் புலவர் "வெண் தலைப்புணரி அலைக்குஞ்செந்தில்'' எனப்பாடுகிறார். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் "சீர்கெழு செந்தில்'' எனப்பாடி உள்ளார்.

முருகன் கோவிலில் ரூ.3-க்கு சாப்பாடு::

திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் ஏழை-எளிய மக்கள் பசியுடன் செல்லக்கூடாது என்பதால் பல்லாண்டுகளுக்கு முன்பே பச்சரிசி சாதம் விற்பனை கோவில் நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது. தற்போது ரூ. 3-க்கு விற்பனை செய்யப்படும் இந்த கட்டி சாதத்தை வாங்கினால் 2 பேர் வரை உண்டு பசி ஆறலாம்.

தினமும் நூற்றுக்கணக்கான கட்டி சாதம் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கட்டி சாதம் கோவில் நிலத்துக்கு குத்தகையாக கிடைக்கும். நெல் மற்றும் விவசாயிகள் காணிக்கையாக செலுத்தும் நெல் மூலம் அரிசி உற்பத்தி செய்து சமையல் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது கோவில் அன்னதானத் திட்டம் மூலம் ஏராளமான வெளியூர் பக்தர்கள் சாப்பிட்டு செல்வது குறிப்பிடத்தக்கது ஆகும்.

திருச்செந்தூரில் இருந்து இலங்கை சென்ற அனுமன்::::

திருச்செந்தூர் கடல் பகுதியில் இருந்து தென் இலங்கை மிக அருகாமையில் அமைந்துள்ளது. திருச்செந்தூரின் கடலோரத்தில் உள்ள 24 தீர்த்தங்களில் சேது தீர்த்தமும் ஒன்று. இங்கிருந்து தான் அனுமன் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டால் சேதுசமுத்திர திட்டம் எந்தவித இடையூறும் இல்லாமல் நிறைவேறும் என்ற கருத்து வரலாற்று ஆய்வாளர்களால் எடுத்து கூறப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்துக்கு அருகாமையில் அமைந்திருப்பது வட இலங்கை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் விளக்கம் ஆகும்.

கேட்டவரம் தரும் வள்ளல் செந்திலாண்டவர்:::

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்துவிட்டு சிவனை பூஜை செய்யும் தவக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவரது கையில் உத்ராட்ச மாலை, அபயகஸ்தம், தாமரை ஆகியவை உள்ளன. மேலும் ஒரு கையால் அவர் பக்தர்களை பார்த்து ஆசீர்வதிக்கிறார். சாந்த சொரூபியாக உள்ள செந்திலாண்டவர் கடல் போல் கருணை மனம் கொண்டவர்.

கடல் பல உயிர்களை பாதுகாத்து அடைக்கலம் கொடுத்துள்ளது போல செந்திலாண்டவர் தன்னை நம்பி வரும் பக்தர்களின் குறை தீர்த்து வைக்கிறார். அவர் பக்தர்களை ஆசீர்வதிப்பதால் அவரை தரிசிக்கும் பக்தர்கள் பகையை வென்று வலம் காணுவார்கள் என்பது ஐதீகம். அது மட்டுமின்றி முருகன் அருளால் பக்தர்கள் கேட்கும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

வரவு-செலவு கேட்கும் முருகன்: சுப்பிரமணிய சுவாமி தினமும் இரவு வள்ளியம்மாள் சன்னதிக்கு சென்றதும் அங்கு சுவாமியும் - வள்ளியும் பள்ளியறை மஞ்சத்தில் எழுந்தருள்வார்கள். அப்போது முருகனுக்கு வரவு-செலவு குறித்த விவரங்கள் கூறப்படும். கோவில் கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானமும், திருப்பணி செலவும் தெரிவிக்கப்படும்.

அதன்பிறகு பள்ளியறை தீபாராதனையாகி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். முன்னதாக சிவிலி என்றழைக்கப்படும் பல்லக்கில் சுவாமி கோவிலை 3 முறை வலம் வருவார். மேலும் ஆவணி, மாசி 6-ம் திருவிழாவின் போது பட்டோலை மூலம் முருகனிடம் சொத்து விபரங்களை தெரிவிப்பார்கள்.

எல்லா செல்வமும் கிடைக்கும்:::

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தினம் முதல் சஷ்டிதிதி வரை சஷ்டி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. எல்லா முருகன் கோவில்களிலும் மிகவும் விசேஷமாக இந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக திருச்செந்தூர் முருகன் திருத்தலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாலசுப்பிரமணியரின் புகழைப்பாடி சண்முக கவசம் முழங்க வலம் வருவார்கள். கந்தசஷ்டி விரதத்தை சிலர் பஞ்சாமிர்தம் மட்டுமே சாப்பிட்டு இருப்பவர்களும் உண்டு. என்றாலும் அவரவர் உடல் நலத்துக்கு ஏற்ப விரதம் இருக்கலாம்.

முருகனைப் போற்றித் துதிக்க எத்தனையோ கவசங்கள் உள்ளன. ஆனால் கோடிக்கணக்கான பக்தர்கள் நாவில் விளையாடுவது கந்தசஷ்டி கவசம் மற்றும் சுப்பிரமணிய கவசம். இந்த கவசத்தை எந்த அளவுக்கு நாம் மனம் உருகி சொல்கிறோமோ அந்த அளவுக்கு முருகன் திருஅருள்ளால் நம் வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.

6 பொருள்:::

ஆறு சமயங்கட்கும், ஆறு ஆதாரங்கட்கும், ஆறு அத்துவாக்களுக்கும், அறுபடை வீடுகட்கும் அதிபன் ஆறுமுருகப் பெருமான். முருகன் என்ற பெயரும் 6 பொருளைக் கொண்டது. தெய்வத்தன்மை, இனிமை, இளமை, மணம், மகிழ்ச்சி, அழகு ஆகிய 6 தன்மைகளை உடையவன் முருகன்.

கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, மேல், கீழ் என்ற 6 திசைகளிலும் பார்வை உள்ளதால் ஆறுமுகன் என்கிறார் அருணகிரிநாதர். ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோ முகமும் சேர்ந்தது ஆறுமுகம்.

தெய்வசிகாமணி:::

நமது உடம்பில் உயர்ந்த பாகம் தலை. அதற்கு மேல் இருப்பது சிகை. அதற்கும் மேல் இருப்பது மணி. அதாவது சிகாமணி மனிதனை விட உயர்ந்தவர்கள் தேவர்கள். தேவர்களுள் உயர்ந்தவர்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு. இந்த மூவரில் உயர்ந்தவர் சிவன். அவருக்கே உபதேசம் செய்தவர் முருகப்பெருமான். இதனால் தன் உச்சி மேல் வைத்து முருகனை சிவன் பூஜித்தார். இதனால் முருகன் தெய்வசிகாமணி என்ற சிறப்பு நாமத்தைப் பெற்றார்.

தமிழே முருகன்::::

முருகக் கடவுளின் உருவ அமைப்பையும் தமிழ்மொழியின் அமைப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிறைய ஒற்றுமை இருப்பதைக் காணலாம். முருகன் 3 கண் உடையவர். இடதுக் கண் சந்திரன். வலது கண் சூரியன். மத்தியில் அக்னி எனும் நெற்றிக்கண். 6 முகங்களிலும் மொத்தம் 18 கண் தமிழில் வழங்கும் மெய் எழுத்துக்களும் 18.

மெய் எழுத்துக்களில் வல்லினம் 6, மெல்லினம் 6, இடையினம் 6. முருகனின் முகங்களும் 6. தமிழில் உயிரெழுத்துக்கள் 12. முருகனின் தோள்கள் 12. உலகின் தமிழ் மொழியில் மட்டுமே ஆயுத எழுத்து உள்ளது. இச்சை, கிரியை, ஞானம் என்ற 3 சக்திகளின் வடிவம் வேல். இ

து முருகப் பெருமானுக்கே உரிய தனி ஆயுதம். முருகு என்ற சொல்லிலும் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம் என்ற 3 வகை எழுத்துக்களும் அமைந்திருப்பது அருமையிலும் அருமை. இதனால் முருகனை தமிழ்க் கடவுள் என்கிறோம். இதை உணர்ந்த அருணகிரிநாதர் முருகனை, ``செந்தமிழ்ப் பெருமாளே'' என்று அழைத்தார்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல பஸ் மற்றும் ரெயில் வசதி உள்ளது.சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்ல தினமும் நேரடி பஸ் வசதி உள்ளது. மேலும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நேரடியாக இந்த கோவில்லுக்கு செல்ல வாரம் ஒரு முறை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (நேரம் பகல்2 .40 ) உள்ளது.

புரட்டாசி சனி விரதம்


"புரட்டாசி சனி" என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5 வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சம சனியென்றும்;

8 வது ராசியில் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும்; 12 வது இராசியிலும், சந்திர இராசியிலும், சந்திரனுக்கு 2 வது இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் (மூன்று ராசிகளையும் கடக்க எடுக்கும் காலம் ஏழரை ஆண்டுகள் அதனால்) கூறுவர். சனீஸ்வரர் மந்தகதி உடையவர்.

இவர் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன. அதனால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக இத்தோஷங்கள் சுழற்சியாக ஏற்படுகின்றன. சனிதோஷ காலங்களில்; புத்திர பாக்கியக் குறைவு, மரண பயம், அதிக பிரயாணம், அதிக செலவு, பண நஷ்டம், தேகசுகக் குறைவு, வீண் சச்சரவு என்பன உண்டாம்.

இவையாவும் சனிதோஷத்தினால் ஏற்படுபவை என கூறப்பெறுகின்றது. சனீஸ்வரனைப்போல் கெடுப்பாரும் இல்லை, கேடுப்பாரும் இல்லை என சோதிடம் கூறுகின்றது.இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இவ் இராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.

சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணை ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்எண்ணெய் (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றி அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும்.

அதன் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி வழிபட வேண்டும். பின் வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும். சனீஸ்வரனின் வாகனமாக காகம் அமைவதால் உணவருந்து முன் காகங்களுக்கு உணவு படைத்தபின்பே தாம் உணவருத வேண்டும்.

அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாசி மாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார்.

சாவர்ணிமனுவும், பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.

துர்க்கை அன்னையை வீட்டில் வழிபடும் முறை

துர்க்கை அன்னையை வீட்டிலேயே தீப பூஜை செய்ய விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் முறையில் அனுசரித்து வழிபட வேண்டும். பூஜை செய்யும் அறையை முதலில் சுத்தமாக கழுவிவிட்டு, அங்கே சக்தி மாகோலமிட வேண்டும். அதனை சுற்றி செம்மண் இட்டு அதன்மீது தலை வாழையிலையை போடவேண்டும்.

வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி அதன் நடுவில் ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும். மஞ்சள் நிறமுடைய பத்து எலுமிச்சம் பழங்களை வாங்கி, பழங்களை இரண்டு துண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

அந்த இருபது துண்டுகளில் இரண்டு துண்டுகளை மட்டும் எடுத்து சாறுபிழிந்து விட்டு- பிழிந்த முடிகளை உள்பக்கம் வெளிப்பக்கம் வருமாறு திருப்பி குழிவான கின்னம் போல் செய்து கொள்ள வேண்டும். அந்த எலுமிச்சம் பழக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட துர்க்கா தேவியின் படத்தின் முன்போ, அல்லது சிலையின் முன்போ வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

துர்க்காதேவிக்கு நிவேதனைப் பொருளாக தயிர் சாதம், உளுத்துவடை, அவல், பாயாசம், எலுமிச்சம் பழச்சாதம் ஆகியவற்றை படைத்து பூஜை செய்ய வேண்டும். இரண்டு துண்டாக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தின் சாற்றைப் பிழிந்து அதில் வெல்ல சர்க்கரை கலந்து பானமாக்கி நிவேதனம் செய்ய வேண்டும்.

பின்னர் துர்க்கா தேவியின் பாமாலைகள், துதிப்பாடல்கள், ராகு காலத்தில் பாடவேண்டிய பாடல்கள் ஆகியவற்றைப் மனம் உருகிப்பாட வேண்டும். பூஜையின் முடிவில் பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பானகத்தைக் கொடுத்து தாங்களும் பருகலாம். துர்க்காதேவியின் பூஜையை வீட்டிலேயே செய்வதால் குடும்பம் என்றென்றும் செல்வச் செழிப்புடன் இருக்கும்.

எல்.ஐ.சி. வினாத்தாள் அவுட்: வினாத்தாளை ரூ.5 லட்சத்துக்கு விற்ற 11 பேர் கைது

எல்.ஐ.சி. நிறுவனத்தில் உதவி நிர்வாக அதிகாரிக்கான எழுத்து தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்தலை மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் எழுதினார்கள். 160 மையங்களில் தேர்வு நடந்தது.

டெல்லியில் 16 மையங்களில் தேர்வு நடந்தது. அங்கு ஒரு மையத்துக்கு தேர்வு எழுத வந்தவர்களிடம் முன்கூட்டியே வினாத்தாள் இருந்தது. உடனே இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் வினாத்தாள் அவுட் ஆனது தெரிய வந்தது. இதனால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். அவர்கள் விசாரணை நடத்தியதில் நாடு முழுவதுமே வினாத்தாள் அவுட் ஆகி இருந்தது தெரிந்தது.

டெல்லி, மராட்டியம், பஞ்சாப், உத்திரபிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் வினாத்தாள் அவுட் ஆகி இருந்தன. இது தொடர்பாக டெல்லியைச்சேர்ந்த பவன்குமார் (வயது 33). என்பவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்படி டெல்லியில் 5 பேரும் ஆந்திராவில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் இதில் தொடர்புடையவர்களை பிடிக்க தீவிர வேட்டை நடந்து வருகிறது. ஒரு வினாத்தாளுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணம் வைத்து விற்று உள்ளனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து இருப்பதாக தெரிகிறது. பெரிய கும்பலே இந்த சதியில் ஈடுபட்டு உள்ளனர். போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கும் இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

வினாத்தாள் அவுட் ஆகிவிட்டதால் நேற்று நடந்த தேர்வு ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி எல்.ஐ.சி. அதிகாரிகளிடம் கேட்டபோது, தேர்வு ரத்தாகுமா? இல்லையா என்பது குறித்து தேர்வு அமைப்பு கூடி முடிவு செய்வோம் என்றனர்.

இந்த மோசடியில் எல்.ஐ.சி. ஊழியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள். தேர்வை எல்.ஐ.சி. நிறுவனம் நேரடியாக நடத்தவில்லை. தேர்வை நடத்தும் பொறுப்பை “எட்சில்” என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்து இருந்தனர். அந்த நிறுவனத்தில்தான் ஏதோ தவறு நடந்து இருப்பதாக கருதப்படுகிறது.

6வது முறை மட்டுமல்ல, 7வது முறையும் கருணாநிதியே முதல்வராவார்-அழகிரி

மதுரை: 6வது முறை மட்டுமல்ல, 7 வது முறையும் கருணாநிதியே முதல்வராவார் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடந்த மேலூர் காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு அழகிரி பேசுகையில்,

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள உயிர் காக்கும் சிகிச்சைப் பிரிவு வசதி தமிழகத்திலேயே மதுரை மாவட்டத்தில்தான் உள்ளது.

மதுரையில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததை அடுத்து முதல்வரிடம் பேசி அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது புதிய வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் மாநகராட்சிக்கு உள்பட்ட சுடலை முத்துப்பிள்ளை காலனியில் 330 அடுக்கு மாடி வீடுகள், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் எல்லீஸ் நகரில் 752 வீடுகள், அவனியாபுரம் நகராட்சிக்கு உள்பட்ட அருப்புக்கோட்டை சாலையில் 192 வீடுகள், ராஜாக்கூர் பெரியார் நகரில் அரசின் மானியத்துடன் 720 வீடுகள் என, மொத்தம் 1994 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது திறக்கப்பட்டுள்ளன.

ரூ.780 கோடி மதிப்பிலான மேலூர் காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் சுமார் 12 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

தி.மு.க. ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நலத் திட்டங்கள் சென்றடைகின்றன. ஏழை, எளிய மக்கள் இந்த ஆட்சியை மறக்க மாட்டார்கள். 6-வது முறையல்ல; 7-வது முறையாகக் கூட தமிழக முதல்வராக கருணாநிதி தேர்வு செய்யப்படுவார் என்றார் அழகிரி.

சாந்தி பட கிளுகிளு நாயகிக்கு புது சிக்கல்!

சாந்தி பட நாயகி அர்ச்சனா சர்மாவுக்கு புது சிக்கல் உருவாகியுள்ளது. இதனால் அப்செட்டில் இருக்கிறார் அர்ச்சனா. இராமநாதபுரம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் புதுமுகம் அர்ச்சனா சர்மா. இராமநாதபுரம் படத்தில் கமிட் ஆவதற்கு முன்பே அம்மணி சாந்தி எனும் அந்த மாதிரி படத்தில் அவிழ்த்து போட்டு நடித்திருக்கிறார். சூட்டை ஏற்றும் படுக்கையறை காட்சிகள் கடந்த சில மாதங்களாகவே யூ டியூப் ‌தளத்தில் ஒலி- ஒளிபரப்பப்படுவது கண்டு செம கடுப்பில் இருக்கிறது இராமநாதபுரம் பட யூனிட். காரணம்... இராமநாதபுரம் படத்தில் அம்மணிக்கு ஹோம்லி கேரக்டராம். புதுமுகம் அர்ச்சனா சர்மா என்று டைட்டில் கார்டில் போட திட்டமிட்டிருந்த அப்படக்குழுவினருக்கு ஏற்கனவே அம்மணி அந்த மாதிரி காட்சிகளில் நடித்தவர் என்று தெரிந்தால் எப்படி இருக்கும்? அதனால்தால் கடுப்பாகியிருக்கிறதாம்.

இதனால்தானோ என்னவோ அம்மணி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், வலுக்கட்டாயமாக படுக்கையறை காட்சியொன்றை எடுத்துவிட்டனர் என்று சாந்தி படக்குழு மீது பரபரப்பு குற்றம் சாட்டியிருந்தார். இதுஒருபுறமிருக்க... மற்‌றொருபக்கம் தன்னை பி.எப் நாயகி என கோலிவுட் குத்தம் சொல்லி வருவது கண்டு அர்ச்சனா சர்மாவும் அப்செட் ஆகி இருக்கிறாராம்! அடப்பாவமே!!

நித்தியானந்தாவை சந்தித்தார் சந்தானம்

காமெடி நடிகர் சந்தானம், சர்ச்சைக்குரிய சாமியாரான நித்தியானந்தாவை நேரில் சந்தித்து பேசினார். நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாதன் மூலம் சர்ச்சைக்குரிய சாமியார்களின் பட்டியலில் இணைந்தவர் நித்தியானந்தா. ரஞ்சிதா தனது பக்தை என்று கூறி வரும் நித்தி, அவர் மீதான புகார்களை மறுத்து வருகிறார். பெரும் தொகை கேட்டு அரசியல்வாதிகள் சிலர் தன்னை மிரட்டியதாகவும், அதற்கு அடிபணியாததால்தான் அதுபோன்ற போலீ வீடியோ ஒன்றை வெளியிட்டு என்னையும், என் பக்தர்களையும், ஆசிர‌மத்தையும் களங்கப்படுத்தி விட்டனர் என்றும் பேட்டியில் கூறியிருந்தார்.

இதற்கிடையில் நித்தியானந்தாவை தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அவ்வ‌ப்போது சந்தித்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக நித்தியானந்தாவை சந்தித்து ஆசி பெற்றிருப்பவர் காமெடி நடிகர் சந்தானம். தமிழ் சினிமா காமெடியர்களில் வேகமாக வளர்ந்து வரும் காமெடி நடிகர் சந்தானம், பெங்களூருவில் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார். முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தின் சூட்டிங் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக ‌அங்கு சென்றிருந்த சந்தானம், சாமியார் நித்தியானந்தாவை நேரில் சந்திக்க விரும்பினார். இதையடுத்து ஆசிரமத்திற்கு சென்று சந்தித்து பேசியிருக்கிறார். சந்தானத்துடன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்டும் சென்றிருந்தார்.

கடைசி பந்து வரை "டென்ஷன்: போட்டி "டை சச்சின், ஸ்டிராஸ் அதிரடி சதம்

பெங்களூரு: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய பரபரப்பான உலக கோப்பை லீக் போட்டி "டை ஆனது. கடைசி பந்து வரை நெஞ்சம் படபடத்த இப்போட்டியில், இரு அணிகளும் தலா 338 ரன்கள் எடுக்க, எத்தரப்புக்கும் வெற்றி வசப்படவில்லை. இந்திய அணிக்கு சச்சின் சதம் மற்றும் ஜாகிர் கானின் அபார பந்துவீச்சு கைகொடுத்தது. இங்கிலாந்து சார்பில் கேப்டன் ஸ்டிராஸ் சதம்(158) வீணானது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த "பி பிரிவு லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
ஸ்ரீசாந்த் நீக்கம்:
இந்திய அணியில் ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டு, பியுஸ் சாவ்லா வாய்ப்பு பெற்றார். இங்கிலாந்து அணியில் உடல்நலக்குறைவு காரணமாக முன்னணி பவுலர் ஸ்டூவர்ட் பிராட் இடம் பெறவில்லை. இவருக்கு பதிலாக அஜ்மல் ஷெஜாத் சேர்க்கப்பட்டார். ரவி போபரா நீக்கப்பட்டு, மைக்கேல் யார்டி இடம் பெற்றார். "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் பேட்டிங் தேர்வு செய்தார்.
சச்சின் சதம்:
ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரிலேயே மூன்று முறை கண்டம் தப்பினார் சேவக். பின் டிம் பிரஸ்னன் வேகத்தில் கீப்பர் மட் பிரயாரின் சூப்பர் "கேட்ச்சில் சேவக்(35) அவுட்டானார். அடுத்து வந்த காம்பிர் "கம்பெனி கொடுக்க, சச்சின் தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார். கோலிங்வுட், ஸ்வான் பந்துகளை வரிசையாக சிக்சருக்கு பறக்க விட்ட இவரது ஆட்டத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்த நிலையில், காம்பிர்(51), ஸ்வான் பந்தில் போல்டானார். பிரஸ்னன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய சச்சின், உலக கோப்பை அரங்கில் 5வது சதம் அடித்து சாதனை படைத்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 47வது சதம். பின் ஸ்வான் சுழலில் இன்னொரு சிக்சர் அடித்து அசத்தினார். ஆண்டர்சன் வேகத்தில் சச்சின் 120 ரன்களுக்கு(10 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட்டானார்.
யுவராஜ் அசத்தல்:
இதற்கு பின் கேப்டன் தோனி, யுவராஜ் சேர்ந்து விவேகமாக ஆடினர். ஷாஜத் வீசிய போட்டியின் 43வது ஓவரில் தோனி இரண்டு பவுண்டரி விளாசினார். இவரது அடுத்த ஓவரில் யுவராஜ் தன் பங்குக்கு இரண்டு பவுண்டரி அடித்தார். யார்டி பந்தில் தோனி ஒரு சிக்சர் அடிக்க, ஸ்கோர் "ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அரைசதம் கடந்த யுவராஜ்(58), யார்டி பந்தில் அவுட்டானார்.
பிரஸ்னன் 5 விக்.,:
கடைசி கட்டத்தில் துல்லியமாக பந்துவீசிய பிரஸ்னன், இந்தியாவின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார். இவரது வேகத்தில் தோனி(31) நடையை கட்டினார். போட்டியின் 49வது ஓவரை வீசிய பிரஸ்னன், முதலிரண்டு பந்துகளில் யூசுப் பதான்(14), விராத் கோஹ்லியை(8) வெளியேற்றினார். இதையடுத்து "ஹாட்ரிக் வாய்ப்பு காத்திருந்தது. அடுத்து வந்த ஜாகிர் ஒரு ரன் எடுக்க, வாய்ப்பு நழுவியது. 4வது பந்தில் ஹர்பஜனையும்(0) அவுட்டாக்கிய பிரஸ்னன், தனது 5வது விக்கெட்டை பெற்றார். கடைசி ஓவரில் சாவ்லா(2), ஜாகிர்(4) ரன் அவுட்டாக, இந்திய அணி 50 ஓவரில் 49.5 ஓவரில் 338 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நல்ல துவக்கம்:
கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், பீட்டர்சன் இணைந்து நல்ல துவக்கம் தந்தனர். முனாப் பந்தில் ஸ்டிராஸ் கொடுத்த "கேட்ச்சை ஹர்பஜன் கோட்டை விட்டார். அப்போது அவர் 22 ரன்கள் தான் எடுத்திருந்தார்.
ஸ்டிராஸ் அசத்தல்:
முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில், முனாப் வேகத்தில் பீட்டர்சன்(31) வீழ்ந்தார். சாவ்லா சுழலில் டிராட்(16) வெளியேறினார். இதற்கு பின் ஸ்டிராஸ், இயான் பெல் இணைந்து அசத்தலாக ஆடினர். யூசுப் பதான் பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட ஸ்டிராஸ், ஒரு நாள் போட்டிகளில் தனது 6வது சதத்தை எட்டினார். தொடர்ந்து மிரட்டிய இவர், யுவராஜ் சுழலில் ஒரு "சூப்பர் சிக்சர் அடித்தார். மறுபக்கம் சாவ்லா பந்தை இயான் பெல், சிக்சருக்கு அனுப்ப, இந்திய ரசிகர்கள் நொந்து போயினர்.
ஜாகிர் திருப்புமுனை:
இந்த நேரத்தில் போட்டியின் 43வது ஓவரை வீசிய ஜாகிர் கான் இங்கிலாந்துக்கு இரட்டை "அடி கொடுத்தார். நான்காவது பந்தில் இயான் பெல்லை(69) வெளியேற்றினார். 5வது பந்தில் ஸ்டிராஸ்(158) அவுட்டானார். இதனை எதிர்த்து இங்கிலாந்து அப்பீல் செய்தும் பலன் கிடைக்கவில்லை. அடுத்த பந்தில் "ஹாட்ரிக் வாய்ப்பு இருந்தது. ஆனால், பிரயார் தடுத்து ஆட, வாய்ப்பு நழுவியது. மீண்டும் மிரட்டிய ஜாகிர், கோலிங்வுட்டை(1) போல்டாக்கினார். ஹர்பஜன் சுழலில் பிரயார்(4) காலியானார். முனாப் பந்தில் யார்டி(13) வெளியேற, இந்தியா வெற்றியை நெருங்கியது. அப்போது 49வது ஓவரை வீசிய சாவ்லா சுழலில் ஸ்வான், பிரஸ்னன் தலா ஒரு சிக்சர் அடிக்க, மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
6 பந்தில் 14 ரன்கள்:
கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டன. முனாப் படேல் பந்துவீசினார். முதல் பந்தில் ஸ்வான் 2 ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் ஒரு ரன். 3வது பந்தில் ஷாஜாத் ஒரு சிக்சர் அடிக்க, "டென்ஷன் எகிறியது. நான்காவது பந்தில் ஒரு ரன். 5வது பந்தில் ஸ்வான் 2 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் ஸ்வான் ஒரு ரன் எடுக்க, இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 338 ரன்கள் எடுத்தது. இரு அணிகளும் ஒரே ஸ்கோர் எடுத்ததால் போட்டி, சமநிலையை("டை) எட்டியது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
பவுலிங் ஏமாற்றம்:
பேட்டிங்கில் அசத்திய போதும், கடைசி கட்டத்தில் பவுலிங்கில் சொதப்பியதால், இந்திய வெற்றி நழுவியது.
ஆட்ட நாயகன் விருதை ஸ்டிராஸ் தட்டிச் சென்றார்.





நான்காவது "டை
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி "டை ஆனது. இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், "டையில் முடிந்த நான்காவது போட்டி என்ற சோகமான பெருமை பெற்றது. முதன்முதலில் கடந்த 1999ல் ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா இடையிலான போட்டி "டை ஆனது. அதன்பின் தென் ஆப்ரிக்கா-இலங்கை (2003), அயர்லாந்து-ஜிம்பாப்வே (2007) அணிகள் மோதிய போட்டி "டை ஆனது.






சச்சின் "உலக சாதனை!
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ரன், அதிக சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக் காரரான இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், உலக கோப்பை அரங்கிலும் பல சாதனைகள் படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், 115 பந்தில் 120 ரன்கள் (5 சிக்சர், 10 பவுண்டரி) எடுத்த சச்சின், உலக கோப்பை வரலாற்றில் அதிக சதம் (5) கடந்து புதிய உலக சாதனை படைத்தார். இதுவரை இவர், 38 போட்டியில் பங்கேற்று 5 சதம், 13 அரைசதம் உட்பட 1944 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் கங்குலி, ஆஸ்திரேலியாவின் பாண்டிங், மார்க் வாக் உள்ளிட்டோர் தலா 4 சதம் அடித்து 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
உலக கோப்பை அரங்கில் சச்சின் அடித்த சதங்களின் விபரம்:
ஆண்டு சதம் எதிரணி
1996 127* கென்யா
1996 137 இலங்கை
1999 140* கென்யா
2003 152 நமீபியா
2011 120 இங்கிலாந்து
-----------
மூன்றாவது இடம்
நேற்றைய போட்டியில் விளையாடிய சச்சின், உலக கோப்பை அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை இலங்கையின் ஜெயசூர்யா, பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (41 போட்டி), மெக்ராத் (39 போட்டி) ஆகியோர் உள்ளனர்.
----
56 ரன்கள் தேவை
உலக கோப்பை அரங்கில், 2000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்ட, சச்சினுக்கு இன்னும் 56 ரன்கள் தேவைப்படுகிறது. இதுவரை இவர் 38 போட்டியில் பங்கேற்று 1944 ரன்கள் எடுத்துள்ளார்.
----
இன்னும் இரண்டு சதம்
சர்வதேச கிரிக்கெட் அரங்கில், ஒருநாள் (47) மற்றும் டெஸ்ட் (51) போட்டியில் சேர்த்து மொத்தம் 98 சதம் அடித்துள்ள சச்சின், இன்னும் இரண்டு சதம் அடிக்கும் பட்சத்தில், சதத்தில் சதம் கடந்து மேலும் ஒரு புதிய சாதனை படைக்கலாம்.
---
அதிக பவுண்டரி
நேற்றைய போட்டியில் மொத்தம் 10 பவுண்டரி அடித்த சச்சின், தனது 7வது பவுண்டரியை கடந்த போது, உலக கோப்பை அரங்கில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட பவுண்டரி அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை இவர் 38 போட்டியில் 203 பவுண்டரி அடித்துள்ளார்.
* நேற்று 5 சிக்சர் விளாசிய சச்சின், அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார். இவர் இதுவரை 24 சிக்சர் விளாசியுள்ளார். முதலிடத்தில் மற்றொரு இந்திய வீரர் கங்குலி (25 சிக்சர்) உள்ளார்.
--------
இந்தியா "338
நேற்று 338 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக கடந்த 2003ல் 9 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
* தவிர இது, சர்வதேச அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக எடுக்கப்பட்ட, 2வது அதிகபட்சம். முன்னதாக கடந்த 2008ல் ராஜ்காட்டில் நடந்த போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 387 ரன்கள் எடுத்தது.
* இது, உலக கோப்பை அரங்கில் இந்திய அணியின் 4வது சிறந்த அதிகபட்ச ஸ்கோர். முன்னதாக 413/5 (எதிர்-பெர்முடா, 2007), 373/6(எதிர்-இலங்கை, 1999), 370/4(எதிர்-வங்கதேசம், 2011) ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரில் 300 ரன்களுக்கு மேல் எடுத்தது.
* இது, பெங்களூரு மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர். முன்னதாக கடந்த 2003ல் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிராக 2 விக்கெட்டுக்கு 347 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இங்கு, இந்திய அணி மூன்றாவது முறையாக 300 ரன்களுக்கு மேல் எடுத்தது.
----
சேவக் "1000
நேற்று 35 ரன்கள் எடுத்த இந்திய துவக்க வீரர் சேவக், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக சச்சின் (1455 ரன்கள்), யுவராஜ் சிங் (1187 ரன்கள்) உள்ளிட்டோர், இப்பெருமை பெற்றனர்.
---
"ரன் வள்ளல் ஆண்டர்சன்
நேற்று 9.5 ஓவர்கள் வீசிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றி, 91 ரன்கள் வழங்கினார். இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், ஒரு போட்டியில் அதிக ரன்கள் வழங்கிய பவுலர்கள் வரிசையில் 5வது இடம் பிடித்தார். தவிர இவர், சர்வதேச ஒருநாள் போட்டியில் இரண்டாவது முறையாக 91 ரன்கள் வழங்கி தனது மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். முன்னதாக கடந்த 2ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 10 ஓவரில் 91 ரன்கள் வழங்கினார். கடந்த 1983ல் நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தின் ஸினிடன், 12 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 105 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
---



ஸ்கோர்போர்டு
இந்தியா
சேவக்(கே)பிரையர்(ப)பிரஸ்னன் 35(26)
சச்சின்(கே)யார்டி(ப)ஆண்டர்சன் 120(115)
காம்பிர்(ப)சுவான் 51(61)
யுவராஜ்(கே)பெல்(ப)யார்டி 58(50)
தோனி(கே)சப்-ரைட்(ப)பிரஸ்னன் 31(25)
யூசுப்(கே)சுவான்(ப)பிரஸ்னன் 14(8)
கோஹ்லி(ப)பிரஸ்னன் 8(5)
ஹர்பஜன் எல்.பி.டபிள்யு.,(ப)பிரஸ்னன் 0(1)
ஜாகிர்-ரன் அவுட்(பிரஸ்னன்/பிரையர்) 4(5)
சாவ்லா ரன்-அவுட்(ஆண்டர்சன்) 2(4)
முனாப்-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 15
மொத்தம் (49.5 ஓவரில் "ஆல் அவுட்) 338
விக்கெட் வீழ்ச்சி: 1-46(சேவக்), 2-180(காம்பிர்), 3-236(சச்சின்), 4-305(யுவராஜ்), 5-305(தோனி), 6-327(யூசுப் பதான்), 7-327(கோஹ்லி), 8-328(ஹர்பஜன்), 9-338(சாவ்லா), 10-338(ஜாகிர் கான்).
பந்து வீச்சு: ஆண்டர்சன் 9.5-0-91-1, ஷெசாத் 8-0-53-0, பிரஸ்னன் 10-1-48-5, சுவான் 9-1-59-1, கோலிங்வுட் 3-0-20-0, யார்டி 10-0-64-1.
இங்கிலாந்து
ஸ்டிராஸ் எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 158(145)
பீட்டர்சன் (கே)+(ப)முனாப் 31(22)
டிராட் எல்.பி.டபிள்யு.,(ப)சாவ்லா 16(19)
பெல் (கே)கோஹ்லி (ப)ஜாகிர் 69(71)
கோலிங்வுட் (ப)ஜாகிர் 1(5)
பிரையர் (கே)சப்-ரெய்னா (ப)ஹர்பஜன் 4(8)
யார்டி (கே)சேவக் (ப)முனாப் 13(10)
பிரஸ்னன் (ப)முனாப் 14(9)
சுவான் -அவுட் இல்லை- 15(9)
ஷாக்ஜாத் -அவுட் இல்லை- 6(2)
உதிரிகள் 11
மொத்தம் (50 ஓவரில், 8 விக்.,) 338
விக்கெட் வீழ்ச்சி: 1-68(பீட்டர்சன்), 2-111(டிராட்), 3-281(பெல்), 4-281(ஸ்டிராஸ்), 5-285(கோலிங்வுட்), 6-289(பிரையர்), 7-307(யார்டி), 8-325(பிரஸ்னன்).
பந்துவீச்சு: ஜாகிர் 10-0-64-3, முனாப் 10-0-70-2, சாவ்லா 10-0-71-2, ஹர்பஜன் 10-0-58-1, யுவராஜ் 7-0-46-0, யூசுப் 3-0-21-0.

காங்கிரசுக்கு இனி வசந்த காலம் : தங்கபாலு பேச்சு

காஞ்சிபுரம் : காங்கிரஸ் கட்சி யாருக்கும் தலை வணங்காது. வரும் காலம் காங்கிரஸ் கட்சிக்கு வசந்த காலமாக இருக்கும் என, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், நடந்த ஓ.வி. அளகேசன் நூற்றாண்டு விழாவில் அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழாவையொட்டி மறைந்த தலைவர்களுக்கு விழா எடுக்கப்படுகிறது. காமராஜர், கக்கன், சி. சுப்பிரமணியம், சட்ட நாதன் கரையாலர் ஆகியோருக்கு விழா எடுத்தோம். தற்போது ஓ.வி. அளகேசன் நூற்றாண்டு விழா காஞ்சிபுரத்தில் கொண்டாடப்படுகிறது. அவர் கண்டிப்பானவர். நேர்மையானவர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்து, காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் பலப்படுத்தியவர். மத்தியில் காங்கிரஸ் அரசு சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 71 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் மத்திய அமைச்சர் சிதம்பரம். காமராஜர் கொண்டு வந்த சத்துணவு திட்டம் இன்று நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும் போது நாடு வளர்கிறது. காங்கிரஸ் வீழ்ந்தால் நாடு வீழ்கிறது.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசாகவும், காங்கிரஸ் அரசு திகழ்கிறது. காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துள்ளது. யாருக்கும் தலை வணங்காது. அன்புக்கு அடி பணிவோம். ஆதிக்கத்திற்கு தலை வணங்க மாட்டோம். சோனியாவையும் , ராகுலையும் மதிப்பவர்களை மதிப்போம். எதிர்ப்பவர்களை எதிர்ப்போம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி முதன்மை கட்சியாக வர வேண்டும் என விரும்புகிறோம். வரும் காலம் காங்கிரஸ் கட்சிக்கு வசந்த காலமாக இருக்கும். இவ்வாறு தங்கபாலு தெரிவித்தார்.

கனிமொழி எஸ்டேட் : ஜெ., அறிக்கை

சென்னை : "கோத்தகிரியில் உள்ள விண்ட்சர் எஸ்டேட்டை உள்ளூர் மக்கள், "கனிமொழி எஸ்டேட்' என்று தான் அழைக்கின்றனர்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ராடியா டேப் விவகாரம் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.அதில், சமீபத்தில் கோத்தகிரியின், "விண்ட்சர் எஸ்டேட்'டை "கனிமொழி எஸ்டேட்' என உள்ளூர்காரர்களால் பேசப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.மேலும், 525.98 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த எஸ்டேட் அன்று வெறும் 2 கோடியே 47 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறது. விண்ட்சர் எஸ்டேட்டின் ஆவணத்தில் சென்னை தி.நகர், 12, சவுத் வெஸ்ட் போக் ரோடு என்ற முகவரியில் வசிக்கும் சேஷாத்ரியின் மகன் சீனிவாச ரத்னம் என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

சலுகைகள் ஏதாவது இருக்குமா? நிதியமைச்சர் பிரணாப் இன்று அறிவிப்பு

மத்திய பட்ஜெட் இன்று பெரிய எதிர்பார்ப்புடன் தாக்கலாகிறது. இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் சுதந்திர இந்தியாவின் 80வது பட்ஜெட் ஆகும். நடுத்தர மக்கள், விவசாயத்தை முன்னேற்ற வழிகள், உணவுப் பாதுகாப்பு திட்டத்திற்கு அதிக முன்னுரிமை, அடிப்படை கட்டுமானப் பணிகளுக்கு அதிக முன்னுரிமை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக பட்ஜெட்டிற்கு முன் தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை அரசின் செயல்பாட்டைக் காட்டும் கண்ணாடி என்று கூறுவது வழக்கம். அதில், மொத்த வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டும் என்று நம்பிக்கை காட்டப்பட்டிருக்கிறது. அதை மீடியாக்கள் அதிக விளம்பரப்படுத்தியுள்ளன. ஆனால், தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் இந்த சதவீதத்தை எட்ட முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளனர். எர்னஸ்ட் அண்ட் யங்க் என்ற பொருளாதார அமைப்பின் தலைவர் அஸ்வின் பரேக் கூறுகையில், " 9 சதவீத வளர்ச்சி என்பதை அடைவது சிரமம். கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் இதற்கு ஆதாரம். இதைவிட லிபியாவில் ஏற்பட்ட நெருக்கடியால், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும் சுமையாகும்' என்றிருக்கிறார். தவிரவும் மற்ற துறைகள் வளர்ச்சி காணப்படாமல் மொத்த வளர்ச்சி என்பது சுலபமல்ல என்றும் கூறப்படுகிறது.

இன்று தாக்கல் செய்யப்படும் 2011 - 2012ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி வரம்பு ஆண்டு ஒன்றுக்கு 2 லட்ச ரூபாயாக உயர்த்தப்படலாம் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. அதே போல சேமிப்பு மேற்கொள்ளும் போது, அதிக சலுகை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில், சமீபத்திய விலைவாசி உயர்வு பாமர மற்றும் நடுத்தர மக்களின் பர்சை காலியாக்கி விட்டதால், அரசு அதை தடுப்பதுடன், சேமிப்பையும் அதிகரிக்க வழிகாணும் என்ற கருத்து உள்ளது. ஏற்கனவே மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டிருக்கும் புதிய நேரடி வரிவிதிப்பு நடைமுறை இன்னமும் அமலாகவில்லை. ஆனால், அதன் நோக்கங்களின் படி தனி நபர் வருமான வரி வரம்பு ஆண்டுக்கு 2 லட்ச ரூபாயாக உயர்த்தப்படலாம் என்று, வரி குறித்த நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

விவசாயம் : அரசுக்குள்ள மற்றொரு பயங்கர சவால், விவசாயத்துறை வளர்ச்சியாகும். இந்த ஆண்டில் பருவ மழை நன்றாக அமைந்த காரணத்தால், அரசு வெளியிட்ட சர்வேயின்படி, விவசாய வளர்ச்சி 5 சதவீதத்தைத் தாண்டி விட்டது. இருந்தாலும், நிதியமைச்சர் உலக உணவு தானிய உற்பத்தி நிலைமையைக் கணக்கில் கொண்டு, இந்த உற்பத்தியை அதிகரிக்க விரும்பி, இனி இரண்டாவது பசுமைப் புரட்சி தேவை என்று வலியுறுத்தியிருக்கிறார். இந்த விஷயத்தில், வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன், "விவசாயத்தில் இளைஞர்களை ஈர்க்கும் திட்டங்கள் தேவை, விவசாயத்தில் அறுவடை காலத்திலும், விவசாயப் பொருட்களைச் சந்தைப் படுத்துவதிலும் அரசும் தனியாரும் இணைந்த ஆதரவுக் கொள்கை தேவை' என்று வலியுறுத்தியுள்ளார். அதைத் தவிர, பிரதமருக்கு விவசாயத் தொழில் சம்பந்தமாக ஆலோசனை கூறும் பூபீந்தர் ஹோடா குழு, " விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் 4 சதவீத வட்டியில் தரப்பட வேண்டும்' என்று யோசனை கூறியிருக்கிறது. இது பட்ஜெட்டில் எதிரொலித்தால், விவசாயிகளைக் கவரும் திட்டமாக அமையும். ஏனெனில், அடுத்த ஆண்டு விவசாய மொத்த உற்பத்தி 3 சதவீதத்தை மட்டுமே எட்டும் என்று அரசு அறிக்கை கூறுகிறது. ஆகவே, இந்த பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு 4 லட்சம் கோடி ரூபாய் கடன் தர இலக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், கடந்த இருபது ஆண்டுகளில் விவசாய நிலம் மொத்த அளவில் 2 சதவீதம் சுருங்கி விட்டது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் 1.85 கோடி எக்டேர் விவசாய நிலம் இருந்தது. உணவு உற்பத்தியை இது பாதிக்கவில்லை என்றாலும், இது கவலை தரும் அம்சமாகும். அது போல, கால்நடைச் செல்வங்களால் கிடைக்கும் வளமும் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், பால் பொருட்களுக்கு இறக்குமதியை நம்ப வேண்டி வரும் என, அரசின் பொருளாதார அறிக்கை தெரிவிக்கிறது. பால் உற்பத்தி அதிகரிப்பு, கால்நடைத் தீவனங்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றிற்கு நடைமுறை தேவை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பங்குச் சந்தை: இதைத் தவிர, கறுப்புப்பணம் மீட்புக்கான நடவடிக்கை குறித்த தகவல் பட்ஜெட்டில் இருக்கும். பங்குச் சந்தை தற்போது இறக்கத்தில் உள்ளது. சோதிடர்கள் கருத்துப்படி, இது நவம்பர் வரை தொடருமாம். மேலும், நிதியமைச்சர் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தை விட மொத்த நிதிப்பற்றாக்குறை அபாயத்தை அடிக்கடி பேசுபவர். அதனால் தான் "3ஜி' ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அதிக வருவாயை ஈட்டித் தந்திருக்கிறார். குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு எண்ணெய் கம்பெனிகளை பாதிக்காதிருக்க மத்திய அரசின் சுங்க வரிக் குறைப்பை அவர் அறிவிக்கலாம்.மேலும் தமிழகம், அசாம் உட்பட ஐந்து மாநில தேர்தலுக்காக, சில சலுகைகளும் இதில் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.


10 தடவை மொரார்ஜி பட்ஜெட் : இன்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது ஆறாவது பட்ஜெட்டை ( 2011 - 2012) தாக்கல் செய்கிறார். இது இந்தியா சுதந்திரம் பெற்ற பின் தாக்கல் செய்யப்படும் 80வது பட்ஜெட். தவிரவும் மத்திய நிதியமைச்சராக ஆறாவது தடவை பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்ற பின் நவ., 26, 1947 ல் முதலாவதாக தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார் பட்ஜெட் தாக்கல் செய்தார். நாட்டில் அதிக அளவாக பத்து முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமை மொரார்ஜி தேசாயைச் சாரும். மத்திய நிதியமைச்சர்களாக சிதம்பரம், யஷ்வந்த் சின்கா, சி.டி.தேஷ்முக், ஒய்.பி.சவான் ஆகியோர் ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கின்றனர். மன்மோகன் சிங், டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள். அந்த வரிசையில் இன்று இடம் பெறுகிறார் பிரணாப்.÷ நரு, இந்திரா, ராஜிவ், சரண்சிங், என்.டி.திவாரி, மதுதண்டவதே போன்றவர்கள் ஒருமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள். இரு முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்களில் ஜஸ்வந்த் சிங், சி.சுப்ரமணியம் குறிப்பிடத்தக்கவர்கள்.நாடு சுதந்திரம் பெற்ற பின், இன்றுடன் 64 முறை வழக்கமான பட்ஜெட்டும், 12 இடைக்கால பட்ஜெட்களும் மற்றும் நான்கு முறை விசேஷ கோரிக்கைக்கான நிதிநிலை அறிக்கைளும் சேர்த்து, மொத்தம் 80 என்ற எண்ணிக்கையை எட்டுகிறது.

எல்ஐசி தேர்வு வினாத்தாள் டெல்லியில் வெளியானது: முக்கிய குற்றவாளி கைது

டெல்லி: எல்ஐசி நிறுவனத்தின் துணை நிர்வாக அதிகாரி பதவிக்கான அனைத்து இந்திய தேர்விற்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே டெல்லியில் வெளியாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியாகி அனைவரின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. அப்படி ஒரு வினாத்தாள் டெல்லி போலீசின் குற்றப்பிரிவுக்கு கிடைத்தது. அப்போது தான் இந்த விவகாரம் வெளியே தெரிய வந்தது.

இது குறித்து குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் அஷோக் சந்த் கூறியதாவது,

வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியாகிவிட்டது. எங்களுக்கும் சில வினாத்தாள்கள் கிடைத்தன. அதை நடக்கவிருக்கும் தேர்வு வினாத்தாளுடன் ஒப்பிடுகையில் இரண்டும் ஒத்திருந்தன என்றார்.

இந்த விவகாரத்தில் பவன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தான் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்?

சென்னை: தி்முக, காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு நேற்றைக்குள் முடிவாகி விடும் என்ற சூழ்நிலை பிரகாசமாக இருந்த நிலையில் திடீரென அதில் பெரும் இழுபறி ஏற்பட்டு விட்டது. இதற்கு அமைச்சர் துரைமுருகனின் பேச்சுதான் காரணம் என்று பரவலாக பேசப்படுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. இன்னும் ஓரிரு நாளே அதற்கு உள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட பல முக்கிய வேலைகளை முடித்து விட்டது. தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமே சீட் ஒதுக்க வேண்டியுள்ளது. அதுதொடர்பான பேச்சுக்களும் கூட சரியான திசையில் செல்வதாக கூறப்படுகிறது.

ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் பெரும் இழுபறியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இரு கட்சிகளுக்கும் இடையே சுமூக தீர்வு ஏற்படும் நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால் கடைசி நேரத்தில் அதில் பெரிய தொய்வு ஏற்பட்டு விட்டது.

இதற்கு முக்கியக் காரணம், திமுக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றிருந்த அமைச்சர் துரைமுருகன்தான் என்று கூறப்படுகிறது. அவர் கிண்டலாகப் பேசியதால் கோபமடைந்த காங்கிரஸ் ஐவர் குழுவில் இடம் பெற்றிருந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரமும், ஜி.கே.வாசனும் அறிவாலயத்திலிருந்து கிளம்பிச் சென்று விட்டனராம்.

இதனால்தான் நேற்றே முடிவாகியிருக்க வேண்டிய தொகுதிப் பங்கீடு விவகாரத்திற்கு தடங்கல் ஏற்பட்டு விட்டதாம்.

நாங்கள் 200 தொகுதிகள் லோக்சபா தேர்தலில் கொடுங்கள் என்று கேட்டால் சும்மா இருப்பீர்களா, சும்மா மிரட்டாதீர்கள் என்று கிண்டலாக துரைமுருகன் கூறியதே சிக்கலுக்குக் காரணம் என்கிறார்கள்.

தங்களை திமுக தரப்பு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லையே என்று காங்கிரஸ் மத்தியில் கோபம் எழுந்துள்ளதாம்.

அதேசமயம், இன்னும் ஓரிரு நாளில், அனேகமாக இன்றைக்குள் கூட தொகுதிப் பங்கீடு சுமூக முடிவை எட்டும் என்று திமுக, காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

முதல் இடம்

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் `முதல் இடம்' படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, மன்னார்குடி போன்ற ஊர்களில் நடந்து வருகிறது.

இந்த படத்திற்காக நாயகன் விதார்த்- கீர்த்திசாவ்லா ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தோடு ஆடிப்பாடும் "ஊரு ஊரு தஞ்சாவூரு இது ராஜராஜன் ஆண்ட ஊரு'' என்ற பாடல் காட்சியை தஞ்சை பெரியகோயில், அரண்மனை, தஞ்சை முக்கிய வீதிகளிலும் படமாக்கினார்கள்.

விதார்த்- கதாநாயகி கவிதா நாயர் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளும், விதார்த்- மயில்சாமி, அப்புக்குட்டி சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகளும், விதார்த்- பொன்னம்பலம் குழுவினர் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன

ஏவிஎம் நிறுவனம் தயாரித்து வரும் 175-வது படமான `முதல் இடம்' படத்தில் கவிதா நாயர், இளவரசு, மயில்சாமி, `பொல்லாதவன்' கிஷோர், `களவாணி' திருமுருகன், கலைராணி, பொன்னம்பலம், `வெண்ணிலா கபடி குழு அப்புக்குட்டி, மனோபாலா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

இசை: டி. இமான், ஒளிப் பதிவு: பி. செல்லத்துரை, எடிட்டிங்: வி.டி. விஜயன், சண்டை: திலீப் சுப்பராயன், நடனம்: தினேஷ், பாடல்கள்: அறிவுமதி, கபிலன், யுகபாரதி, தயாரிப்பு நிர்வாகம்: தஞ்சை கே. மோகன், பி. சுரேந்தர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஆர். குமரன். தயாரிப்பு: எம். சரவணன், எம்.எஸ். குகன்.

தீபிகா படுகோனே அசின் மோதல்

இந்திப் படமொன்றில் தீபிகா படுகோனேக்கு வந்த வாய்ப்பை அசின் தட்டி பறித்துள்ளார். இதனால் இருவருக்கும் பனிப்போர் நடக்கிறதாம்.

ரஜினியுடன் ஜோடி சேர தீபிகாவுக்கு அழைப்பு வந்துள்ளது. அதே படத்தில் அசினும் வாய்ப்பு பிடித்துள்ளார்.

ஒருவர் மீது ஒருவர் நெருக்கமானவர்களிடம் புகார் கடிதம் வாசித்து வருகின்றனர்.

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருச்செங்கோடு

இந்த கோவிலில் வீற்றிருக்கும் இறைவன் - அர்த்தநாரீஸ்வரர்;இறைவி பாகம்பிரியாள்.இந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1900 அடி உயரத்தில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல மலைப்பாதை வழியாக பேருந்து மற்றும் கார் மூலம் மட்டுமே செல்ல முடியும்.

மேலும் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல விரும்புவோர் படிகட்டுகள் மூலம் செல்லலாம். இந்த கோவிலுக்கு 1200 படிகட்டுகள் கொண்ட நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு செல்லும் வழிகளில் ஒய்வு எடுத்துவிட்டுச் செல்ல வசதியாக பல மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.அதில் பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இங்கு படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் பாதி ஆணாகவும்,பாதி பெண்ணாகவும் (பார்வதி தேவி) காட்சி அளிப்பதே ஆகும்.

இந்த கோவிலில் மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் காட்சி அளிக்கிறார்.

புனித தீர்த்தங்கள்::::

தீர்த்தங்கள் சிவபெருமானாலும் விநாயபெருமானாலும் முருகபெருமானாலும், தேவர்கள் மற்றும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

இவற்றுள் சில முக்கிய தீர்த்தங்கள் , குமார தீர்த்தம், சக்தி தீர்த்தம், பாவநாச தீர்த்தம், பைவர தீர்த்தம், நாக தீர்த்தம், சூரிய புஷ்கரணி, அல்லி சுனை, சித்தர் முலிகை தீர்த்தம்,கணபதி தீர்த்தம், தேவ தீர்த்தம், அம்மையப்ப தீர்த்தம், குமார தீர்த்தம்,மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் ஆகும்.

இந்த தீர்த்தங்கள் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும் தன்மை கொண்டவை. மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தேவதீர்த்தம் தான் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. இந்தக் கோவிலில் கிழக்கு நோக்கி உள்ள செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது.

மேலும் அருணகிரிநாதர் தனது "திருப்புகழில்" இத்திருத்தலத்தி உள்ள முருகனைப் பற்றி அழகாக பாடியுள்ளார். செங்கோட்டு வேலவர் சந்நிதியில் உள்ள சிற்பங்கள் மிகுந்த கலை நுணுக்கத்துடன் சிற்ப வேலைப்பட்டிற்கு மிக சிறந்த வரலாற்று சான்றாகக் காட்சி அளிக்கின்றன.

இங்குள்ள நாகர் சந்நிதியில் வழிப்பட்டால் நாக தோஷங்கள் நீங்குவதற்காக பக்தர்கள் நம்புகின்றனர்.எனவே அதிக அளவில் இங்கு பக்தர்கள் வ‌ந்து வழிபடுவார்கள்.

போக்குவரத்து வசதி:::

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் சென்று பின் அங்கிருந்து திருச்செங்கோட்டிற்கு சென்று பின் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.

அதிக உடற்பயிற்சி ஆபத்து

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கு மாற்றாக மிக அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதும், போதுமான தூக்கமின்மையும் கூட இதயப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மிகவும் `பிசி'யாக இருப்பதற்கு, அதாவது `ஜெட்' வேக வாழ்க்கைமுறைக்குப் பலியாவது தூக்கம்தான்.

நான் சில மணி நேரம் தூங்கினால் போதும், தொடர்ந்து வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிடுவேன்' என்று பெருமையடித்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். சீரான இதயத் துடிப்பு மற்றும் இயல்பான ரத்த அழுத்தத்துக்கு நல்ல தூக்கம் அவசியம்.

``இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சீராகப் பராமரிப்பதற்கு உடம்பு அதன் சொந்த ஒழுங்குமுறை அமைப்பைக் கொண்டிருக்கிறது. போதுமான தூக்கமின்மை, `உயிர்க் கடிகாரத்தை'ப் பாதிக்கிறது. எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் அதை ஈடுகட்ட முடியாது'' என்று இதய மருத்துவர் பகவத் கூறுகிறார்.

உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் அதிகமான உடற்பயிற்சி, நன்மையை விட அதிகம் தீமையே பயக்கும் என்று இதய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈராக்கில் எண்ணை சுத்திகரிப்பு ஆலை குண்டு வைத்து தகர்ப்பு

எண்ணை உற்பத்தியில் உலக அளவில் ஈராக் 3-வது இடம் வகிக்கிறது. எனவே இங்கு அதிக இடங்களில் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. சலாகுதீன் மாகாணத்தில் உள்ள பெய்கி என்ற இடத்தில் மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் துப்பாக்கி ஏந்திய மர்ம மனிதர்கள் சிலர் அங்கு புகுந்தனர். அவர்களை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுத்தனர். உடனே அவர்கள் காவலர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒருவர் உயிர் இழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

பின்னர், அந்த சுத்திகரிப்பு ஆலை மீது வெடிகுண்டுகளை வீசி தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அதில், சுத்திகரிப்பு ஆலை தகர்ந்து தீப்பிடித்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அங்கு ஆலை மூடப்பட்டது. மறு சீரமைப்பு நடந்து விரைவில் அந்த ஆலை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு தீ வைக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் பேரல் எண்ணை உற்பத்தி செய்யப்படுகிறது.

கேரளாவில் குண்டு வெடித்து 5 பேர் பலி: தயாரித்தபோது வெடித்தது

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ளது நடபுரம் கிராமம். இங்குள்ள ரகசிய இடம் ஒன்றில் நேற்று இரவு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 3 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.

இறந்த 5 பேரும் ரியாஷ், ஷமீர், ஷபீர், ரபீக், ஷபீல் என்று அடையாளம் தெரிந்தது. 5 பேருமே அருகருகே உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள். அவர்கள் வெடிகுண்டு தயாரித்தபோது குண்டு வெடித்து உள்ளது. ஏன் அவர்கள் குண்டு தயாரித்தார்கள்? எங்கேனும் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் குண்டு தயாரித்தார்களா? என்று தெரியவில்லை.

இந்த பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தொண்டர்கள் அடிக்கடி மோதிக்கொள்வது உண்டு. அப்போது வெடிகுண்டு தாக்குதல்களும் இடம் பெறும். எனவே இப்போது குண்டுகளை தயாரித்தவர்களும் இதற்காகவே தயாரித்து இருக்கலாம் என கருதப்படு கிறது. இவர்களுடன் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? ஏதேனும் முக்கிய சதித்திட்டம் தீட்டி இருக்கிறார்களா? எனவும் விசாரணை நடந்து வருகிறது.

ராஜஸ்தானில் நில நடுக்கம்: வீடுகள் குலுங்கின

ராஜஸ்தான் மாநிலம் சிகர் பகுதியில் நேற்று இரவு 9.10 மணியளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கின. பாத்திரங்கள் உருண்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

சிறிது நேரம் கழித்து வீடுகளுக்கு திரும்பினர். இதற்கிடையே அங்கு 3 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிகர் மாவட்டத்தில் நீம்கா தானா என்ற இடத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.

வருகிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிப்பதே எனது லட்சியம்; டைரக்டர் சீமான் பேச்சு

தேனி மாவட்டம் சின்ன மனூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் முல்லை பெரியார் மீட்பு விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இளந்திரையன் தலைமை தாங்கினார். இதில் டைரக்டர் சீமான் பேசியதாவது:-

முல்லை பெரியாறு பிரச்சினை, காவிரி பிரச்சினை, மீனவர் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை தீர்க்க நாம் தமிழர் என்ற ஒற்றுமையுடன் தமிழர்கள் அனைவரும் போராட வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் நான் பணப்பெட்டி வாங்கி கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்பதாக தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர்.

இலங்கை தமிழர்களை கொன்று குவித்த காங்கிரசை அடியோடு அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக உள்ளேன். காங்கிரசுக்கு உறுதுணையாக உள்ள தி.மு.க. அரசையும் வருகிற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். எனவே வருகிற சட்ட மன்ற தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நிற்கும் அ.தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி சார்பில் வீடு, வீடாக பிரசாரம் செய்யப்படும்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட் கொடுக்கப்படும் என்று காங்கிரஸ்காரர்களை விட நான் மிக ஆர்வமாக உள்ளேன். ஏனென்றால் காங்கிரஸ் வேட்பாளர்களை அனைத்து தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அப்படி செய்தால் தான் இலங்கை தமிழர்களின் ஆத்மா சாந்தி அடையும். தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் பணம் தருவார்கள். அந்த பணம் யாருடையது என்று பணம் கொடுப்பவர்களிடம் கேள்வி கேளுங்கள். ஏனென்றால் அந்த பணம் அனைத்தும் நம்முடையது. எனவே ஓட்டுக்கான பணம் தருவதை பெற்று கொண்டு காங்கிரசுக்கு எதிராக வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பெருநாட்டில் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலி

லிமா: பெருநாட்டில் உள்ள ஹுயான்கயோவில் இருந்து தலைநகர் லிமாவுக்கு சென்ற பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 19 பேர் பலியாயினர். 37 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் மற்றும் மீட்பு படையினர் உதவியுடன் காயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோரிக்கையை கிண்டல் செய்ததால் தி.மு.க.,விடம் பேச்சுவார்த்தை நடத்திய காங்., குழு அதிருப்தி

சென்னை: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, காங்கிரஸ் கோரிக்கையை தி.மு.க., தரப்பில் கிண்டல் செய்ததால், காங்கிரஸ் ஐவர் குழு, கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால், இரு கட்சிகளிடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க., - காங்கிரஸ் ஐவர் குழு இடையே, 20ம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல் திட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என, காங்., தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை தி.மு.க., ஏற்காததால், அன்றைய பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நிலவரம் குறித்து, காங்., தலைவர் சோனியாவிடம் தெரிவித்தனர். தி.மு.க.,வின் தொகுதிப் பங்கீடு திட்டத்தை ஏற்காத சோனியா, புதிய மாற்றுத் திட்டத்தை அளிக்குமாறு தி.மு.க.,வை கேட்டுக் கொண்டார். கால தாமதமின்றி பேச்சுவார்த்தையை நடத்துமாறு, தி.மு.க.,வினர், சோனியாவை வலியுறுத்தியதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை 25ம் தேதி இரவு 8.30 மணிக்கு அறிவாலயத்தில் துவங்கியது. அடுத்த 25 நிமிடங்களுக்குப் பின், முதல்வர் கருணா நிதி அறிவாலயம் வந்தார். அதனால், பேச்சுவார்த்தை முடிந்து, இரு கட்சித் தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதாக தகவல் பரவியது.

பேச்சுவார்த்தைக்கிடையே, துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் முதல்வர் இருக்கும் அறைக்கு சென்றனர். ஐந்து நிமிடங்களில் தொகுதி பங்கீடு பேச்சு நடக்கும் அறைக்கு திரும்பினர். இதனால், இன்னும் சில நிமிடங்களில் உடன்பாடு எட்டப்படும் என்று அனைவரும் தயாராக இருந்தனர். ஆனால், பேச்சுவார்த்தை அரங்கிலிருந்து அமைச்சர்கள் சிதம்பரம்,வாசன் ஆகியோர் வேகமாக வெளியேறினர். முதல்வர் இருக்கும் அறைக்கு இவர்கள் செல்கிறார்களோ என எதிர்பார்த்து காத்திருந்த போது, அவர்கள் கார்களில் ஏறி அறிவாலயத்திலிருந்து வெளியில் சென்றதைப் பார்த்து, இரு கட்சி தொண்டர்களும் ஏமாற்றம் அடைந்தனர். சிதம்பரம், வாசனை தொடர்ந்து வெளியில் வந்த காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, "பேச்சுவார்த்தை திருப்தியளிப்பதாக இருந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும்' என கூறிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார்.

நடந்தது என்ன? பேச்சுவார்த்தையில் பங்கேற்ற, கிண்டல் பேச்சுக்கு பெயர் பெற்ற தி.மு.க., மூத்த அமைச்சர் ஒருவர் செய்த கிண்டல் தான், உடன்பாடு ஏற்படாமல், காங்., தலைவர்கள் வெளியேறியதற்கு காரணம் என கூறப்படுகிறது. எப்போதும் நகைச்சுவை, கேலி, கிண்டலாக பேசக்கூடிய அந்த அமைச்சர், காங்கிரஸ் குழுவினரிடம், "உங்களிடமும் உளவுத்துறை உள்ளது; எங்களிடமும் உளவுத்துறை உள்ளது. இரு கட்சிகளின் பலத்தையும், இருவரும் அறிவோம். வேண்டுமானால், கூட்டணிக்கு நீங்கள் தலைமை ஏற்றுக் கொள்ளுங்கள். அதில், நாங்கள் சேர்ந்து கொள்கிறோம். லோக்சபா தேர்தலில், நாங்கள் 200 இடங்கள் கேட்டால், நீங்கள் தந்து விடுவீர்களா? சும்மா மிரட்டாதீர்கள்' என கிண்டலாக கூறியுள்ளார். இதனால், காங்., குழுவினர் வருத்தம் அடைந்து, பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சர் அடித்த கிண்டலால், காங்., குழுவினர் தி.மு.க., மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், பேச்சுவார்த்தை நடத்துவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. மேலும், மற்றொரு தரப்பினர் கூறும் போது, "பேச்சுவார்த்தை தொடக்கத்திலேயே 53 இடங்கள் தான் தரப்படும்; மேலிடத்தில் கேட்டு விட்டு வாருங்கள் என, தி.மு.க.,வினர் கூறியதால், பேச்சுவார்த்தையை தொடர முடியாமல் காங்., குழுவினர் சென்றனர்' என்றும் தெரிவித்தனர்.

லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி துவங்கியது: முதல் விமானம் டில்லி வந்தது

புதுடில்லி: லிபியாவில் சிக்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை மீட்கும் பணி நேற்று துவங்கியது. இதற்காக, இரண்டு சிறப்பு விமானங்கள் லிபியா தலைநகர் டிரிபோலிக்கு அனுப்பப்பட்டன. இதில், முதல் விமானத்தில் 300 பேர் நேற்றிரவு டில்லி வந்து சேர்ந்தனர். விமானங்கள் தவிர நான்கு கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

லிபியா தலைவர் மும்மர் கடாபி, பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கடந்த இரு வாரங்களாக, அந்நாட்டு மக்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கடாபி ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்ததால், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அங்கு தங்கியிருந்த வெளிநாட்டவர்கள், அந்தந்த நாடுகளால் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றனர். கலவர பூமியாக மாறிவிட்ட லிபியாவில், தற்போது 18 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் லிபியாவில் உள்ள இந்திய தூதரகம் தீவிரமாக இறங்கியுள்ளன.

இரண்டு சிறப்பு விமானங்கள்: டிரிபோலி, பெங்காசி, சபா மற்றும் குப்ரா நகரங்களின் உள்ள விமான நிலையங்களில் இந்தியர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களை மீட்பதற்காக, ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 747 விமானம் மற்றும் ஏர்பஸ் 330 விமானம் இரண்டும், நேற்று டிரிபோலியில் தரையிறங்கின. இந்த விமானங்கள் இரண்டிலும், 640 பேர் பயணிக்க முடியும். முதல் விமானம் 300 பேருடன் நேற்று மாலை 4.10 மணிக்கு டிரிபோலியில் இருந்து புறப்பட்டு, இரவு 12 மணிக்கு டில்லி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. அவர்களை மத்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். மீட்புப் பணியில் இந்த விமானங்கள் மார்ச் 7ம் தேதி வரை ஈடுபடுத்தப்படும்.

நான்கு கப்பல்கள்: இவை தவிர, ஐ.என்.எஸ்., ஜலஸ்வா மற்றும் ஐ.என்.எஸ்., மைசூர் என்ற இரண்டு கப்பல்கள், மும்பையில் இருந்து நேற்று புறப்பட்டுள்ளன. எகிப்தின் "போர்ட் சயீத்' துறைமுகத்தில் இருந்து நேற்று புறப்பட்ட "ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற கப்பல், நாளை நண்பகலில் பெங்காசி போய்ச் சேரும். இக்கப்பலில் 1,200 பேர் பயணிக்க முடியும். மத்திய தரைக் கடலில் உள்ள மால்டா நாட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் மற்றொரு பயணிகள் கப்பல், லிபியாவுக்குத் திருப்பி விடப்பட்டு, அதன் மூலமும் இந்தியர்கள் மீட்கப்படுகின்றனர். இந்த இரண்டாவது கப்பலில் 1,600 பேர் பயணிக்க முடியும். இதுதவிர, மேலும் இரண்டு கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல்கள் மூலம் லிபியாவில் இருந்து மீட்கப்படும் இந்தியர்கள், எகிப்தின் அலெக்சாண்டிரியா நகருக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவர். மீட்புப் பணியில் உதவுவதற்காக, டிரிபோலியில் உள்ள இந்திய தூதரகத்தில் மேலும் பல அதிகாரிகளை, இந்திய வெளியுறவு அமைச்சகம் பணிக்கு அமர்த்தியுள்ளது.

உணவு, தண்ணீரின்றி தவிப்பு: லிபியா - டுனீசியா எல்லைக்கருகில் உள்ள ஜாவியா நகரில், கடாபி ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கடும் மோதல் நடந்து வருவதால், அங்குள்ள இந்தியர்கள், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள ஓர் இந்தியர் கூறுகையில்,"ஜாவியாவில் நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. உணவு, தண்ணீர் உள்ளிட்ட எந்தப் பொருளும் கிடைக்கவில்லை' என்று கவலையுடன் தெரிவித்தார்.

சீடன் - பட விமர்சனம்

நடிப்பு: கிருஷ்ணா, தனுஷ், அனன்யா, ஷீலா
இசை: தினா
இயக்கம்: சுப்பிரமணியம் சிவா
தயாரிப்பு: அமித் மோகன்

எப்போதோ வந்திருக்க வேண்டிய ஒரு கதை, மிகக் காலம் கடந்து இப்போது வந்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன் மலையாளத்தில் வெளியான நந்தனம் படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த சீடன். கதையை மட்டும் மலையாளத்திலிருந்து எடுத்துக் கொண்டு, தமிழ்நாட்டு சூழலுக்கேற்ப திரைக்கதை அமைத்திருந்தால் ஒரு வேளை பார்க்கும்படி இருந்திருக்குமோ என்னவோ....

பழனியில் பெரிய அரண்மனை வீட்டில் ஒரேயொரு பாட்டி. அவருக்கு வேலைக்காரியாக இருக்கிறார் அனன்யா. பக்கா முருக பக்தை. ஆனால் பழனி முருகனைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு வீட்டில் வேலை அவரை அழுத்துகிறது.

அப்போது அந்த வீட்டுக்கு வருகிறான், பாட்டியின் பேரன் கிருஷ்ணா. வழக்கம்போல வேலைக்காரிக்கும் பேரனுக்கும் காதல். இந்தக் காதல் தெரிந்ததும், கிருஷ்ணாவின் அம்மா அவனை தன் தோழியின் மகனுக்கு கட்டி வைக்க திட்டம் போடுகிறார்.

அனன்யாவின் வாழ்க்கை சோகமாக, 'முருகா காப்பாத்து' என அவர் உருகுகிறார். சரியாக அந்த நேரத்தில் வீட்டுக்குள் நுழைகிறார் சமையல்காரர் சரவணன் ( தனுஷ்). அதன் பிறகு எல்லாமே மாறுகிறது. இதில் அனன்யா - கிருஷ்ணா காதல் என்னாகிறது... தனுஷால் அந்தக் காதல் கைகூடுகிறதா என்பது மீதிக் கதை.

படம் முழுக்க மலையாள வாடை. வசனங்களில் கூட அப்படியே. காட்சிகள் ஒவ்வொன்றும் சவசவவென வந்து போகின்றன. "அடுத்த காட்சி இதுதான்... இந்த இடத்தில் காதலைச் சொல்லப் போகிறார்கள். இதோ இப்போது காதல் பிரியப் போகிறது... அடுத்த சீனில் தனுஷ் வருவார் பார்..." என மகா சுலபத்தில் ஊகிக்க முடிகிற திரைக்கதை, பொறுமையைச் சோதிக்கிறது. இத்தனைக்கும் இரண்டு மணி நேரமே ஓடும் படம் இது!

வசனங்களாவது கொஞ்சம் ஷார்ப்பாக உள்ளதா என்றால், ம்ஹூம்... மெகா சீரியல் தோற்றது போங்கள்!

எதற்காக தனுஷுக்கு இத்தனை மகா ஆர்ப்பாட்டமான விளம்பரம் என்று தெரியவில்லை. அவர் வருவது கொஞ்ச நேரம்தான். அதிலும் சமையல் பற்றி படு சுமாரான ஒரு பாட்டைப் பாடிவிட்டு, எப்போது சீனிலிருந்து போனார் என்பதே தெரியாமல் போகிறார்.

ஹீரோவாக கிருஷ்ணா என்பவர் நடித்திருக்கிறார். இப்படி ஒரு பாத்திரத்தில் வந்து போகிறார் என்பதைத் தவிர பெரிதாக சொல்ல ஏதுமில்லை.

அனன்யா பரவாயில்லை... முகமும் நடிப்பும் பார்க்கும்படி உள்ளது. விவேக்கின் போலிச்சாமியார் கெட்டப்பும், தினாவின் இசையும் சகிக்கலை!

சுகாசினி, ஷீலா, இன்னொரு பாட்டி என படம் முழுக்க 'கிழவிகள்' மயம். கடுப்பாக உள்ளது. இன்னொன்று, அவ்வப்போது வரும் குட்நைட் காயில் விளம்பரங்கள். விளம்பரப் படத்துக்கு நடுநடுவே படத்தை ஓட்டுகிறார்களோ என்ற பிரமையைத் தவிர்க்க முடியவில்லை. என்னதான் தயாரிப்பாளர் குட்நைட் கம்பெனி உரிமையாளர் என்றாலும் இத்தனை.. இத்தனை விளம்பரம் ஆகாது!

திருடா திருடி என்ற ஒரேயொரு 'விசிட்டிங் கார்டு' திரையுலக வாழ்க்கை முழுவதற்கும் கூட வராது என்பதை இயக்குநர் சுப்பிரமணிய சிவா புரிந்துகொண்டால் சரி.

முக நூல்

Popular Posts