background img

புதிய வரவு

2ஜி ஊழல்: கருணாநிதி மீதும் நடவடிக்கை எடுக்க ஜெ.வலியுறுத்தல்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், முதல்வர் கருணாநிதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த அவர், இந்த வழக்கு தொடர்பாக முதல்வர் கருணாநிதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீரா ராடியாவிடம் தொலைபேசியில் பேசிய கனிமொழி மற்றும் ராசாத்தி அம்மாள் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ராசாவுக்குப் பிறக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற கபில் சிபல்,எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

தற்போது அரசின் மற்றொரு அங்கமான சிபிஐ,ராசாவை கைது செய்திருக்கிறது.எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றால், ராசாவை ஏன் கைது செய்ய வேண்டும்? என்று அவர் மேலும் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts