background img

புதிய வரவு

காங்கிரஸில் இணைகிறார் எஸ்.வி. சேகர்

சென்னை, பிப். 2: மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகருமான எஸ்.வி. சேகர் காங்கிரஸில் சேர இருப்பதாக அறிவித்துள்ளார்.
2006 சட்டப் பேரவைத் தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற எஸ்.வி. சேகர், கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக திமுகவுடன் நெருக்கம் காட்டி வந்தார். முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், பிற அமைச்சர்களை அடிக்கடி சந்தித்து வந்தார். அதனால் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு திமுகவில் இணையப் போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் பிப்ரவரி 6-ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வைத்து காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts