மேற்குவங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக புகார் கூறி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், மிட்னாப்பூரில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்டு வந்த முகாமிலிருந்து கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருந்ததாக குற்றம்சாற்றப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கூறிய திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் 2 பேரும் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்ட போதிலும், அவர்கள் மீதான குற்றச்சாற்றுக்களுக்கான ஆதாரங்களை திரட்டுவதற்காக காத்திருந்ததால்தான், புத்ததேவ் இன்று அக்கடிதத்தை எழுதியதாக மேற்கு வங்க மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அக்கடிதத்தில், மிட்னாப்பூரில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்டு வந்த முகாமிலிருந்து கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருந்ததாக குற்றம்சாற்றப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கூறிய திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் 2 பேரும் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்ட போதிலும், அவர்கள் மீதான குற்றச்சாற்றுக்களுக்கான ஆதாரங்களை திரட்டுவதற்காக காத்திருந்ததால்தான், புத்ததேவ் இன்று அக்கடிதத்தை எழுதியதாக மேற்கு வங்க மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
0 comments :
Post a Comment