background img

புதிய வரவு

மாணவர்களுக்கு விடுதி:ரூ. 2 கோடி இந்தியா உதவி

காத்மாண்டு:நேபாளத்தின் மேற்குப் பகுதியில், கட்டுமானப் பணிகளுக்காக, 2 கோடி ரூபாய் நிதி உதவியை இந்தியா அளிப்பதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.நேபாளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கூர்க்கா மாவட்டத்தில், 1,200 மாணவ, மாணவியர் தங்கிப் படிப்பதற்கான, ஸ்ரீபீமோதயா அடுக்கு விடுதி கட்டுமானம் மற்றும் மாவட்ட மேம்பாட்டு வளர்ச்சி ஆகிய இரு திட்டங்களுக்காக, இந்தியா, 2 கோடியே 21 லட்ச ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.இதற்கான ஒப்பந்தம், தலைநகர் காத்மாண்டுவில் இந்தியாவுக்கும் நேபாளத்தின் கூர்க்கா மாவட்ட கமிட்டிக்கும் இடையில் நேற்று கையெழுத்தானது. இம்மாவட்டத்தில், இந்திய நிதி உதவியுடன் நடக்கும் ஆறாவது நலத்திட்டம் இது என்பது, குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts