முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது ஆனதைத் தொடர்ந்து அதனை வரவேற்றுள்ள தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையே தீர்வாக அமையும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் இப்போதாவது கைது செய்து இருப்பது வர வேற்கத்தக்கது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களின் கோபத்தை தணிக்க கைது நடவடிக்கை போலித்தனமாக இல்லாமல் உறுதியான நடவடிக்கையாக இருக்கவேண்டும்.
இந்த பிரச்சினையில் தனி ஒரு மனிதர் மட்டும் ஈடுபட்டு இருக்க மாட்டார். எனவே இதில் தொடர்புடைய மற்ற அரசியல்வாதிகள், அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும். அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும்.
பாராளுமன்ற கூட்டுக்குழு, சுப்ரீம் கோர்ட்டு விசாரணைகள் மூலம் மட்டுமே இதன் முழு விபரங்களையும் வெளிக்கொண்டு வர முடியும்." என்றார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் இப்போதாவது கைது செய்து இருப்பது வர வேற்கத்தக்கது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களின் கோபத்தை தணிக்க கைது நடவடிக்கை போலித்தனமாக இல்லாமல் உறுதியான நடவடிக்கையாக இருக்கவேண்டும்.
இந்த பிரச்சினையில் தனி ஒரு மனிதர் மட்டும் ஈடுபட்டு இருக்க மாட்டார். எனவே இதில் தொடர்புடைய மற்ற அரசியல்வாதிகள், அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும். அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும்.
பாராளுமன்ற கூட்டுக்குழு, சுப்ரீம் கோர்ட்டு விசாரணைகள் மூலம் மட்டுமே இதன் முழு விபரங்களையும் வெளிக்கொண்டு வர முடியும்." என்றார்.
0 comments :
Post a Comment