background img

புதிய வரவு

42-வது நினைவு நாள்: அண்ணா சமாதியில் ஜெயலலிதா அஞ்சலி

42-வது நினைவு நாள்:
 
 அண்ணா சமாதியில்
 
 ஜெயலலிதா அஞ்சலிஅண்ணாவின் 42-வது நினைவு தினத்தையொட்டி மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நயினார் நாகேந்திரன், செ.ம. வேலுச்சாமி, இளைஞர் பாசறை செயலாளர் கலைராஜன், எம்.எல்.ஏ.க்கள் கு. சீனிவாசன், திருத்தணி அரி, சின்னசாமி, ஸ்ரீரங்கம் பரஞ்சோதி, சேலம் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், செந்தமிழன், அவைத்தலைவர் கோதண்டராமர், பொருளாளர் பி. வெற்றிவேல், தொழிற்சங்க செயலாளர் அர்ஜூனன், பேரவை செயலாளர் ஸ்டிக்கர் ரவி, இளைஞர் அணி செயலாளர் ஆர்.டி. சாம்சன், மூலக்கடை சக்தி, அண்ணாநகர் என். தயாளன், டி. ஈஸ்வரன், ஜம்1லி வடிவேல், விருகை 2ந்தரராஜன், விரை கறீம், சைதை சி.எம். சாமி, தி.நகர் சி.பி. அசோக், மயிலை ராஜேஷ்கண்ணன், வீரைகறீம், லண்டன் இளங்கோ, டைரக்டர் நாஞ்சில் பி.சி. அன்பழகன், பல்லடம் துரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


புதிய நீதிக்கட்சி சார்பில் அண்ணா படத்திற்கு கட்சியின் நிறுவனர் ஏ.சி. சண்முகம் மலர் அஞ்சலி செலுத்தினார். தலைமை நிலையச் செயலாளர் ரவிக்குமார், ஆர்.டி. சேதுராமன், பழனி, மாநில இளைஞரணிச் செயலாளர் ராஜாராம், சுதர்சனன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் இசக்கிமுத்து, நிர்வாகிகள் பிரபு, சேகரன், நடிகை புவனேசுவரி, சங்கரபாண் டியன், திருநாவுக்கரசு, சேவக பெருமாள், பெரியதுரை, செல்வகுமார் உள்பட பலர் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தினர். மற்றும் கவிஞர் காசிமுத்து மாணிக் கம், விருகை மகேந்திரன், எம்.ஜி.ஆர்.நகர் முருகன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts