background img

புதிய வரவு

'சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் 2ஜி உரிமங்களை ரத்து செய்ய முடியாது

மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி)அறிக்கையின் அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 2ஜி ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், எனவே ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றை வரிசையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கூறி தன்னார்வ அமைப்பு ஒன்றும், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிஏஜி-யின் அறிக்கை மற்றும் அதில் உள்ள புகார்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய முடியாது என்று கூறினர்.

மேலும், மத்திய அரசு தாக்கல் செய்யும் அந்த அறிக்கையின் அடிப்படையிலும், விசாரணையின் முடிவில் கிடைக்கப்பெறும் உண்மையின் அடிப்படையிலுமே நீதிமன்றம் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதிகள் கூறினர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts