background img

புதிய வரவு

காஷ்மீர் மக்கள்: அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு

தங்களது மாநிலங்களில் தங்கியிருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில மக்களை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி துன்புறுத்தக்கூடாது என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில மக்களைப் பற்றிய விசாரணைகளின்போது மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் பேச்சுவார்த்தைக் குழுவினரிடம் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, மற்ற மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கினால் அங்குள்ள காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கடுமையாக துன்புறுத்துவதாகவும், எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதை தொடர்ந்தே மத்திய அரசு மேற்கூறிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts