மகன் விஜய்ஸ்ரீஹரி விவகாரத்தில் கோர்ட் - கேஸ் என்று அலைந்து கொண்டிருக்கும் நடிகை வனிதா மீது அவரது முதல் கணவர் ஆகாஷ் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதாவுக்கும், அவரது முதல் கணவர் ஆகாஷூக்கும் விஜய் ஸ்ரீஹரி என்ற மகன் இருக்கிறார். வனிதாவும், ஆகாஷூம் விவாகரத்து செய்துள்ள நிலையில் மகன் ஸ்ரீஹரியை உரிமை கொண்டாடுவது தொடர்பாக சண்டை வந்தது. இந்த சண்டை கோர்ட் வரை சென்று, மகனை வளர்ப்பதற்கான உரிமையை பெற்றார் வனிதா. ஆகாஷ் தனது மகனை பார்த்துச் செல்லவும் அனுமதி தரப்பட்டுள்ளது.
ஆனால் மகனை தன்னிடம் ஒப்படைக்கும்படி ஆகாஷ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வனிதாவும் ஒரு தாயாக மகனை வளர்க்க உரிமை கேட்டு கோர்ட்டில் போராடி வருகிறார். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், தனி அறையில் விஜய்ஸ்ரீஹரியை வனிதா சந்தித்து பேசுவதற்கு அனுமதி வழங்கினார். சுமார் 20 நிமிடம் நடந்த இந்த சந்திப்பிற்கு பிறகு ஸ்ரீஹரி அழுதபடி அறையில் இருந்து வெளியே வந்தான்.
இதையடுத்து ஆகாஷ் சார்பில் அவரது வக்கீல் புதிய புகார் ஒன்றை கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அதில், தனி அறையில் நடந்த சந்திப்பின்போது விஜய்ஸ்ரீஹரியை, வனிதா அடித்ததாக அவர் கூறினார். மேலும் தற்போதைய நிலையே தொடர்ந்து நீடிக்க உத்தரவிட வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டார். இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த நீதிபதி, "இந்த விவகாரம் பற்றி மனோதத்துவ நிபுணர்களிடம் பேசி இருக்கிறேன். 2 கோணத்தில் பிரச்சினை இருக்க வேண்டும். ஒன்று, விஜய்ஸ்ரீஹரியை வனிதா கொடுமைப்படுத்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால், வனிதா கொடுமைப்படுத்துவதாக ஆகாஷ் தரப்பில் விஜய்ஸ்ரீஹரியை கூற வைத்திருக்க வேண்டும். எனக்கு ஆகாஷ், வனிதா பற்றி கவலை இல்லை. விஜய்ஸ்ரீஹரியின் நலன் பற்றிதான் நான் யோசித்து வருகிறேன் என்றார். இந்த வழக்கு விசாரணை 3ம்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மகனை தன்னிடம் ஒப்படைக்கும்படி ஆகாஷ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வனிதாவும் ஒரு தாயாக மகனை வளர்க்க உரிமை கேட்டு கோர்ட்டில் போராடி வருகிறார். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், தனி அறையில் விஜய்ஸ்ரீஹரியை வனிதா சந்தித்து பேசுவதற்கு அனுமதி வழங்கினார். சுமார் 20 நிமிடம் நடந்த இந்த சந்திப்பிற்கு பிறகு ஸ்ரீஹரி அழுதபடி அறையில் இருந்து வெளியே வந்தான்.
இதையடுத்து ஆகாஷ் சார்பில் அவரது வக்கீல் புதிய புகார் ஒன்றை கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அதில், தனி அறையில் நடந்த சந்திப்பின்போது விஜய்ஸ்ரீஹரியை, வனிதா அடித்ததாக அவர் கூறினார். மேலும் தற்போதைய நிலையே தொடர்ந்து நீடிக்க உத்தரவிட வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டார். இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த நீதிபதி, "இந்த விவகாரம் பற்றி மனோதத்துவ நிபுணர்களிடம் பேசி இருக்கிறேன். 2 கோணத்தில் பிரச்சினை இருக்க வேண்டும். ஒன்று, விஜய்ஸ்ரீஹரியை வனிதா கொடுமைப்படுத்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால், வனிதா கொடுமைப்படுத்துவதாக ஆகாஷ் தரப்பில் விஜய்ஸ்ரீஹரியை கூற வைத்திருக்க வேண்டும். எனக்கு ஆகாஷ், வனிதா பற்றி கவலை இல்லை. விஜய்ஸ்ரீஹரியின் நலன் பற்றிதான் நான் யோசித்து வருகிறேன் என்றார். இந்த வழக்கு விசாரணை 3ம்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment