
இது தொடர்பான மனுவை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் தனிபாதுகாவல் அதிகாரியிடம் திங்கள்கிழமை அவர் அளித்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியது:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் உருவாக்கப்படும் மனைகள் மற்றும் வீடுகளை அரசின் விருப்புரிமைப் பிரிவின்கீழ் ஒதுக்கீடு செய்ததில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஊடகங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது. விதிகளுக்கு உட்பட்டு உரிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல், அதிகாரத்தில் உள்ளவர்களில் வேண்டியவர்களுக்கும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி கேட்டு ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் விருப்புரிமைப் பிரிவின்கீழ், தகுதியின்றி மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டியல், இதில் நடைபெற்றுள்ள விதி மீறல்கள், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் உதவியாளருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மனையை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை ஆகியவை அடங்கிய 3 இணைப்புகளைக் கொண்டதாக அந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் மூலம் இது தொடர்பான ஆவணங்கள் திரட்டப்பட்டன. இது உள்பட தமிழக முதல்வர் மீது 23 ஊழல் புகார்கள் தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதில் முதலில் வீட்டுவசதி வாரிய முறைகேடு தொடர்பாக வழக்குத் தொடர ஆளுநரின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படும்.
2ஜி ஒதுக்கீட்டில்: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டில் பணம் வாங்கிய விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி தனிப்பட்ட முறையில் செயல்பட்டுள்ளதால், அதில் வழக்குத் தொடர ஆளுநரின் அனுமதி தேவையில்லை.
2ஜி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு வரும் 22-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, முதல்வர் கருணாநிதி மீதான வழக்கை தனியாகத் தொடர்வதா அல்லது ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குடன் சேர்த்து நடத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் சுவாமி.
0 comments :
Post a Comment