background img

புதிய வரவு

எகிப்து: ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இராணுவம் உத்தரவு

இப்போதைக்கு தாம் விலகப்போவதில்லை என்று எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால், வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

அதிபர் பதவியிலிருந்து முபாரக் விலக கோரி பல்லாயிரக் கணக்கான மக்கள் தாஹ்ரி சதுக்கத்தில் குவிந்து,ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், இராணுவம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

"உங்களது செய்தி தெரிவிக்கப்பட்டுவிட்டது. உங்களது கோரிக்கைகள் தெரிந்துவிட்டன. எனவே உங்களது போராட்டத்தை முடித்துக்கொண்டு கலைந்து செல்லுங்கள்" என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருபவர்களுக்கு இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts