background img

புதிய வரவு

தொகுதி பங்கீடு: அ.இ.அ.தி.மு.க- ம.தி.மு.க. 4ஆ‌ம் தேதி பேச்சு

சென்னை அஇஅ‌திமுகவுட‌ன் தொகு‌தி ப‌ங்‌கீடு கு‌றி‌த்து வரு‌ம் 4ஆ‌ம் தே‌தி ம‌திமுக பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த உ‌ள்ளதாக அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌‌ச் செய‌ல‌ர் வைகோ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னையில் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சியபோது அவ‌ர், தொகுதி பங்கீடு குறித்து அ.இ.அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்த ம.தி.மு.க.வில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அந்த குழுவில் திருப்பூர் மாவட்ட செயலர் ஆர்.டி.மாரியப்பன், காஞ்‌சிபுரம் மாவட்ட செயலர் பாலவாக்கம் சோமு, முன்னாள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் குருநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த குழு வ‌ரு‌ம் 4ஆ‌ம் தேதி முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. ம.தி.மு.க. பொதுக்குழு வருகிற 17ஆ‌ம் தேதி அண்ணாநகரில் உள்ள விஜயஸ்ரீ மண்டபத்தில் நடைபெறும் என்று வைகோ கூ‌றினா‌ர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts